Wednesday, October 14, 2015

தக்கலை ஒன்றியத்தில் மதிமுக உறுப்பினர் சேர்ப்பு பணி தீவிரம்!

குமரி மாவட்ட, தக்கலை ஒன்றிய மதிமுக சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு பணி நடைபெற்று வருகிறது. இதில் மாவட்ட அமைப்பு பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். 

இந்த உறுப்பினர் சேர்ப்பு பணியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பள்ளியாடி குமார் மற்றும் மதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆனந்தராஜன் உடன் ஒன்றிய கழக செயலாளர் ஜேபி.சிங் ஆகியோர் மற்றும் கழக தோழர்கள் இருந்தனர்.

இதே போல அனைத்து மாவட்ட ஒன்றியங்களிலும் தீவிரமாக உறுப்பினர் சேர்க்கை நடைமுறைப்படுத்தவேண்டுமென்று, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக தோழர்களை, ஓமன் மதிமுக இணையதள அணி வலியுறுத்துகிறது.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment