Saturday, October 31, 2015

திருச்சி ஆர்ப்பாட்டத்தில் தலைவர் வைகோ மத்திய மாநில அரசை எதிர்த்து சூளுரை!

சிறுபான்மை தலித் மக்கள் மீதான கொலை வெறி தாக்குதல், கருத்துரிமை மீதான தாக்குதலை கண்டித்து மக்கள் நல கூட்டியக்கம் சார்பில், திருச்சியில் இன்று 31-10-2015 நடந்த பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் வைகோ, முத்தரசன், திருமாவளவன் உள்ளிட்ட அனைத்து கூட்டியக்க தலைவர்கள் கலந்துகொண்டார்கள்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், 'மூடு டாஸ்மாக்கை மூடு.. ஊத்தி கொடுத்த உத்தமி போயஸ் கார்டனில் உல்லாசம்' என்ற கோவனின் பாடலை பாடி, முடிந்தால் என் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு போடட்டும் என்று தமிழக அரசுக்கு பகிரங்க சவால் விடுத்தார்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment