Wednesday, October 7, 2015

துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா திருச்சியில் சுற்றுபயணம்!

திருச்சி புறநகர் மாவட்ட ம.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், முதல் கட்டமாக உறுப்பினர் சேர்கை பூர்த்தி செய்யபட்ட படிவங்களை துணை பொது செயலாளர் மல்லை சத்யா அவர்கள் பெற்று கொண்டு உரை ஆற்றினார். 

முன்னதாக மதிமுக துணைப்பொதுசெயலாளர் மல்லை சத்யா அவர்கள் திருச்சி சுற்றுப்பயணத்தில், கழக கொடியேற்றினார். இந்த நிகழ்ச்சியில் மதிமுக மாநில மகளிரணி செயலாளர் மருத்துவர் ரோஹையா, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, புறநகர் மாவட்ட செயலாளர் மற்றும் கழக தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment