Tuesday, October 13, 2015

மாநில மதிமுக இணையதள அணி கலந்தாய்வு-வைகோ தலைமை!

மாநில அளவிலான மதிமுக இணையதள அணியினரின் கலந்தாய்வு கூட்டமானது, டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி, தமிழக தலைநகர் சென்னை எழும்பூரில் அமைந்திருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகமான தாயகத்தில், காலை 9.00 மணிக்கு தொடங்கி மாலை 6.00 மணிவரை நடைபெறவுள்ளது. 

இந்த நிகழ்வில் தமிழின முதல்வர், கழக பொதுச்செயலாளர், தலைவர் வைகோ அவர்கள், இணையதள அணியினரின் கலந்தாய்வு கூட்டத்திற்கு தலைமை தாங்கி, காலை தொடங்கி மாலை முடிவு நிகழ்வு வரை முழுவதும் கலந்து கொள்கிறார். 

எனவே தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட மதிமுக இணையதள அணியினர், மாநில அளவிலான இந்த நிகழ்வில், தவறாமல் கலந்து கொண்டு தலைவரின் ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் பெற வேண்டுகிறோம்.

மேலும், பிற மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் வாளும், நம்முடைய இணையதள அணியினர், தங்களுக்கு வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் மாநில அளவிலான மதிமுக இணையதள அணி கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொள்ள ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் அன்போடு, கேட்டு கொள்ளபடுகிறார்கள். 

வாருங்கள் தோழர்களே! தமிழின முதல்வருடன் கலந்துரையாட வாருங்கள்!

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment