Wednesday, October 28, 2015

கோவை மக்கள் நலன் காக்கும் கூட்டியக்க நிர்வாகிகள் கூட்டம்!

இன்று 28.10.2015 ஆம் நாள் காலை 10 மணியளவில் கோவை மாவட்ட மக்கள் நலன் காக்கும் கூட்டியக்க நிர்வாகிகள் கூட்டம் சி.பி.ஐ மாவட்ட அலுவலகமான ஜீவா இல்லத்தில் சிபிஐ மாவட்ட செயலாளர் கே.எம். செல்வராஜ் அவர்கள்  தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார், புறநகர் மாவட்ட பொறுப்பாளர் குகன்மில் செந்தில்,வழக்கறிஞர் சூரி.நந்தகோபால்,சிபிஎம் சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன்,மாவட்ட செயலாளர் வி.ராமமூர்த்தி,சிபிஐ சார்பில் வி.எஸ்.சுந்தரம்,மவுனசாமி, அஸ்ரப் அலி, விசிக சார்பில் மாவட்ட செயலாளர் இலக்கியன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

நிறைவேற்றபட்ட தீர்மானங்கள்:-
தீர்மானம் 1- அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வை கண்டித்து மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கத்தின் சார்பில் வருகின்ற 03.11.2015ம்நாள் செவ்வாய்க்கிழமை மாலை 4மணிக்கு கோவை டாடாபாத் மின்வாரிய அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும்.

தீர்மானம் 2- வருகின்ற 25.11.2015ம்நாள் மக்கள் நலன் காக்கும் கூட்டியக்க குறைந்த பட்ச செயல்திட்ட விளக்க பொதுக்கூட்டம் கோவை சிவானந்தா காலனியில் நடந்து வது என்றும் இதில் கூட்டணி கட்சியின் அகில இந்திய, மாநில  தலைவர்களை அழைத்து கூட்டத்தை சிறப்பாக நடத்துவது என்றும் இந்த பொது கூட்டம் தமிழக அரசியல் வரலாற்றில் மிக பெரிய திருப்புமுனையை ஏற்படுத்துகின்ற வகையில் சிறப்பான முறையில் ஏற்பா டுகள் செய்வது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment