Sunday, October 18, 2015

மதிமுக வேலூர் மாநகர் பொறுப்பாளர் இல்ல திருமணத்தில் வைகோ வாழ்த்துரை!

மறுமலர்ச்சி தி.மு.க ஆட்சிமன்ற குழு உறுப்பினரும் வேலூர் மாநகர பொறுப்பளருமான, அன்புக்குரிய அண்ணன் ண்.சுப்பிரமணி அவர்களின் இளைய மகன் ‎சுந்தர் மற்றும் ஜனனி‬ ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று வேலூரில் நடந்தது. 

தலைவர் வருவதை அறிந்ததனால், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களை வரவேற்க வேலூர் மாநகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டது. தலைவர் திருமண நிகழ்வில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார்.

ஓமன் மதிமுக இணையதள அணி சார்பிலும் மணமக்களை அனைத்து செல்வங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ்க என வாழ்த்துகிறோம்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment