Saturday, October 31, 2015

தாம்பரம் நகரக் கழக அவைத்தலைவர் திரு சிவஞானம் அவர்கள் மறைந்தார்!

இதிகாசங்கள் இந்துத்துவத்தின் குறியீடுகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றன.இருப்பினும் நமக்குத் தேவையான கருத்துக்களை எடுத்துக் கொள்ளலாம்.அப்படி என்னைக் கவர்ந்தது மகாபாரதம்.அதில் பாஞ்சசயன்யம் ஒலிக்க நடந்த குருசேத்திய யுத்தத்தில் பீஷ்மரின் விருப்ப மரணம் பாண்டவர்களின் வெற்றிக்கு மிக முக்கியக் காரணம் என்பது என் எண்ணம். அந்தக் கதாபாத்திரம் கர்ணனுக்கு அடுத்து என்னைக் கவர்ந்த பாத்திரம்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக 2013 ஜீலை மாதத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் சார்பாக கழக நிதியளிப்பு விழா தாம்பரம் சண்முகம் தெருவில் நடைபெற்றது.அந்தக் கூட்டத்தில் தலைவர் வருவதற்கு முன்பு இசை முரசின் எதிரொலி நெல்லை அபுபக்கர் அவர்களின் இசைக் கச்சேரி நடைபெற்றது.5.:30 மணிக்கு அவரின் இசைக்கச்சேரி தொடங்கியது. 3 பாடல்கள் பாடினார் பின்பு பலத்த மழை பெய்யத் தொடங்கியது.

அப்பொழுது குறைவான உயரம்,பெரியாரின் தொண்டர் போல கருஞ்சட்டை அணிந்த ஒருவர் உடனே அருகில் இருந்த கடையில் அந்த பலத்த மழையிலும் ஒரு குடை போன்ற ஒன்றை ஏற்பாடு செய்து நெல்லை அபுபக்கர் தொடர்ந்து தலைவர் வரும் வரை பாடினார்.அப்பொழுது அபுபக்கர் அவர்கள் "எனக்கு நாளைக்கு குற்றாலத்தில் ஒரு கச்சேரி இருக்கின்றது.இரயிலை விட்டாலும் கூட பேருந்திலே போயிறுவேன்.இவருக்காகப் பாடுவேன்" என்றார்.அப்படி இறுதி வரை உயரம் குறைவாக இருந்தாலும் இறுதி வரை குடையைப் பிடித்துக் கொண்டே இருந்தார் அந்தப் பலத்த மழையிலும்.அதன் பின்பு தலைவர் வந்த பின்பு ஒலிபெருக்கியில் "தலைவர் இதற்கு முன்பு பலத்த புயலுக்கிடையே பேசியுள்ளார்.எனவே யாரும் கவலைப்பட வேண்டாம்.தலைவர் கண்டிப்பாகப் பேசுவார்" என்று கர்ஜித்தார்.

அதன் பின்பு கடந்த Oct 3 அன்று தலைவர் துவக்கிய காஞ்சி மறுமலர்ச்சிப் பயணத்தில் தலைவரின் இறுதிப் பிரச்சார இடம் தாம்பரம் சண்முகம் தெரு..அங்கு வந்து 10:15 க்குப் பேசிய தலைவர் அவர் பெயரைக் குறிப்பிட்டு "இவரைப் போன்ற தொண்டர்கள் 20 ஆண்டுகள் எந்தப் பதவியிலும் இல்லாமல் இந்த இயக்கத்திற்குப் பாடுபட்டு வருகின்றார்" என்றார்.

அதன் பின்பு Oct 25 அன்று விழுப்புரம் ஜெயம் மஹாலில் நடைபெற்ற பொம்பூர் பாண்டியன் திருமணத்தில் பேசிய தலைவர் " நேற்று காலை 4 மணிக்கு சென்னை விமான நிலையம் சென்று,அங்கிருந்து மதுரை சென்று அதன் பின்பு திருப்பத்தூர் சென்று மருதுபாண்டியர்களுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு சென்னை விமான நிலையம் வந்து வீட்டிற்குக் கூட செல்லாமல் ,நேராக இந்த இயக்கத்திற்கு பாடுபட்டு வரும் அவர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கின்றார்.அவரால் பேச முடியவில்லை.அவரைப் பார்த்து விட்டு நேராக விக்கிரவாண்டி வந்து தோழர்கள் என்னை அழைத்துச் சென்றார்கள் " என்று பேசினார்.

இப்படிப்பட்ட தகுதிகள் கொண்ட தலைவரால் உச்சி முகர்ந்து பாராட்டப்பட்ட அந்த தன்னமில்லாத அந்த தொண்டர் தான் இன்று இயற்கை எய்தினாரே காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தாம்பரம் நகரக் கழக அவைத்தலைவர் அய்யா சிவஞானம் அவர்கள்.
குருசேத்திர யுத்தத்தை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் எதிர் கொள்ளவிருக்கும் ஒரு சூழ்நிலையில் ஒரு பீஷ்மரை இழந்து விட்டோம்.இவரைப் போன்ற தொண்டர்களால் காப்பாற்றப்பட்ட இயக்கம் இனி வெற்றியை நோக்கிப் பயணிக்கும்.

அய்யா வானத்திலிருந்து எங்களை வாழ்த்துங்கள்!!
உங்கள் நினைவலைகளை சுமந்து தமிழின விடியலுக்காக தொடர்ந்து பயணிப்போம்!!

ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் திரு சிவஞானம் அவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

செய்தி: தீபன் பழனிசாமி முகநூல்

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment