Thursday, January 14, 2016

ஜல்லிகட்டு தடை நீக்க கோரி ஜனவரி 17 மதுரையில் வைகோவுடன் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் உண்ணாவிரதம்!

ஜனவரி 17 ல் ஜல்லிக்கட்டுத் தடையை நீக்கக் கோரி மதுரையில், மக்கள் நலக் கூட்டணியின் உண்ணாநிலை அறப்போர் நடைபெறும் என மதிமுக பொதுச் செயலாளரும், மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான வைகோ தெரிவித்துள்ளார்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழர்கள் தங்கள் கலாச்சாரத்தின் அடையாளமாக நடத்தி வந்த ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கு முறையான நடவடிக்கை எடுக்கத் தவறிய மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும், தமிழர்களின் வாழ்வோடு ஜல்லிக்கட்டு இணைந்தது என்பதை வலியுறுத்தியும் மக்கள் நலக் கூட்டணியின் சார்பில் ஜனவரி 17 ஆம் தேதி மதுரை மாநகரில், ஓபுலா படித்துறை அருகில் மாபெரும் உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெறும்.

இந்த அறப்போரில், மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்களும், தொண்டர்களும், உணர்வாளர்களும் நானும் பங்கேற்கிறோம் என வைகோ தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment