Monday, January 18, 2016

மக்கள் நலக் கூட்டணியின் ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம்!

நாகா்கோவிலில் 17-1-2016 அன்று, அகஸ்தீஸ்வரம், தோவாளை, ராஜாக்கமங்கலம் ஒன்றிய மக்கள் நலக் கூட்டணியின் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் கன்னியாகுமரி மதிமுக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் வெற்றிவேல், அகஸ்தீஸ்வரம் மதிமுக ஒன்றிய செயலாளர் அன்பழகன், தோவாளை மதிமுக ஒன்றிய செயலாளர் இராமையா, ராஜாக்கமங்கலம் மதிமுக ஒன்றிய செயலாளர் கபிரியேல், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவேந்தன், CPI மற்றும் CPM சார்பில் முந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் பெல்லார்மின், முருகேசன், அந்தோணிமுத்து ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் ஏராளமான கூட்டணி கட்சியினரின் தொண்டர்கள் கலந்துகொண்டனர். EX.MP. பெல்லார்மின் மற்றும் மதிமுக மாவட்ட செயலாளர் வெற்றிவேல் சிறப்புரையாற்றினார்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment