Wednesday, January 20, 2016

நெய்வேலி எம்.பி ரெசிடென்சியை திறந்து வைத்து வைகோ வாழ்த்து!

20.01.2016 இன்று காலை  10.00 மணிக்கு கழகத்தின் சொத்துப்பாதுகாப்புக் குழு உறுப்பினரும், நெய்வேலி நகரச் செயலாளருமான எம்.பிச்சை அவர்கள் கட்டியுள்ள எம்.பி ரெசிடென்சி மற்றும் பார்வதி மகால் திறப்பு விழா நிகழ்வு நடந்தது.

இதன் திறப்பாளர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் வருகைதந்து எம்.பி ரெசிடென்சி மற்றும் பார்வதி மகாலை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

இந்த நிகழ்வில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், உறவினர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment