Wednesday, February 3, 2016

47 ஆவது அண்ணா நினைவு அமைதி ஊர்வலம் அண்ணா சமாதியில் முடிந்தது!

பேரறிஞர் அண்ணாவின் 47-ஆவது நினைவுநாளை முன்னிட்டு இன்று 03.02.2016 புதன்கிழமை மாலை 5.00 மணி அளவில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் அமைதி ஊர்வலம் சென்னை, திருவல்லிக்கேணி, வாலாஜா சாலையில் உள்ள டி-1 காவல் நிலையம் அருகிலிருந்து சென்னை கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்திற்கு பேரணியாகச் சென்றது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், அண்ணாவின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் கழக முன்னணியினரும், கழகத் தோழர்களும் பெருமளவில் பங்கேற்றனர். மகளிரணியினரின் அணிவகுப்பு அருமையாக அமைந்திருந்தது.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment