Tuesday, February 9, 2016

ஆலங்குடி உச்சி வெயிலிலும் காத்திருந்து மக்கள் நலக் கூட்டணி தலைவர்களின் உரை கேட்ட பொதுமக்கள்!

புதுக்கோட்டை- ஆலங்குடியில் தகத்தகக்கும் உச்சிவெயிலில் மதியம் 1:00 மணி அளவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு மக்கள் நலக் கூட்டணி தலைவர்களின் பேச்சை ஆர்வமாக கேட்டனர். மக்கள் நலக் கூட்டணிக்கு மாற்றம் வேண்டி கூடிய கூட்டமாக மாற்றத்தை விரும்பும் மக்கள் ஆர்ப்பரித்தனர்.

மக்கள் நலக் கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்டட்தை விளக்கி தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்கள். திமுக, அதிமுகவிற்கு மக்கள் நலக் கூட்டணிதான் மாற்று என்று மாற்று அரசியல், மாற்று பாதை என்ற கோட்பாட்டை முன்னிறுத்தி செயல்படுகின்றது மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தியிருக்கிறது. 

மேலும் பூரண மதுவிலக்கு, முழுமையான ஊழல் ஒழிப்பு, ஊழல் ஒழிக்க லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றம் உள்ளிட்டவை மக்களை கவருவதாகவே அமைகிறது.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment