Sunday, February 21, 2016

சிவகிரியில் சிறப்பான கூட்டம், மக்கள் கடலில் கூட்டணி தலைவர்கள் உணர்ச்சியுரை!

சிவகிரி பகுதிகளில் நமது மக்கள் நலக் கூட்டணியின் பதாகைகளை கிழித்து எறிந்தனர் கொங்கு ஈஸ்வரன் மற்றும் திமுக அமைப்பினர். அவர்களின் இந்த ஈனத்தனமான செயலை கண்டித்து சாட்டை அடி கொடுத்தார் தியாக வேங்கை கணேசமூர்த்தி அவர்கள். 

நீங்கள் பதாகைகளை கிழித்து மக்கள் மத்தியில் இந்த பொதுக்கூட்டத்தை பற்றி தெரியவிடாமல் செய்தீர்கள். நாங்கள் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை கொடுத்து இந்த பொதுக்கூட்டத்தை வெற்றி அடைய செய்தோம். இதை தடுக்க திராணி இருக்கிறதா எனவும் கேள்வி எழுப்பினார்.

ஏராளமான மக்கள் கூட்டம் திரண்டது. தலைவர்கள் எல்லாம் உண்மைகளை எடுத்துரைத்து பேசினார்கள்.மக்கள் நலக் கூட்டணியை மக்கள் ஆதரிக்கிறார்கள். வருகிற 2016 தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியை வெற்றிபெற செயுங்கள். மதுவில்லா தமிழகம் உருவாக்கப்படும். ஊழலில்லா தமிழகம் உருவாகும்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment