Friday, February 19, 2016

தே.மு.தி.க.வின் அரசியல் திருப்புமுனை மாநாடு மகத்தான வெற்றி பெற மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் வாழ்த்து!

2016 பிப்ரவரி 20 ஆம் நாள் காஞ்சிபுரத்தில் நடைபெற உள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் அரசியல் திருப்புமுனை மாநாட்டு அழைப்பிதழ் கிடைக்கப் பெற்றோம். அழைப்பிற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தமிழக அரசியலின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகும் மிக முக்கியமான காலகட்டத்தில், இந்த மாநாடு நடைபெறுகிறது. பேரறிஞர் அண்ணா அவர்கள் மறைவுக்குப் பின், தமிழ்நாட்டை மாறிமாறி ஆட்சி செய்த தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளுக்கு மாற்றாக ஓர் அரசியல் சக்தி எழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலும், ஏக்கத்திலும் தமிழக மக்கள் உள்ளனர். இதனைத் தே.மு.தி.க.வின் தலைவர், மதிப்பிற்குரிய கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நன்றாக அறிவார்கள்.

இந்தப் பின்னணியில் நடைபெறுகின்ற தே.மு.தி.க.வின் அரசியல் திருப்புமுனை மாநாடு, தமிழ்நாட்டுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கும் திருப்பத்திற்குக் கட்டியம் கூறும் மாநாடாக வெற்றி பெற, மக்கள் நலக் கூட்டணியின் சார்பில் மகிழ்ச்சியோடு வாழ்த்துகின்றோம் என வைகோ, ஜி.இராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், தொல்.திருமாவளவன் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment