Friday, February 12, 2016

தத்துவக் கவிஞர் குடியரசு நினைவு நாளில் வைகோ மலர் தூவி அஞ்சலி!

தத்துவக் கவிஞர் குடியரசு அவர்களின் 13ஆவது நினைவு நாளான 12.02.2016 இன்று, மதிமுக தலைமை அலுவலகமான எழும்பூரில் அமைந்திருக்கும், தாயகத்தில் அவரது திருஉருவப் படத்துக்கு மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

உடன் அவரது புதல்வரும் கழகத்தின் அரசியல் ஆய்வு மைய உறுப்பினருமான இசைவாணன், மாவட்டச் செயலாளர்கள் வடசென்னை - சு.ஜீவன், தென்சென்னை - வேளச்சேரி மணிமாறன், மத்திய சென்னை மாவட்டப் பொறுப்பாளர் ரெட்சன் சி.அம்பிகாபதி மற்றும் எழும்பூர் தென்றல் நிசார், ஆயிரம்விளக்கு வழக்கறிஞர் டி.ஜெ.தங்கவேலு, துறைமுகம் நாசர், கவிஞர் மணிவேந்தன், எம்.எல்.எப்.ஜார்ஜ், மோகன்ராஜ், திருச்சி அடைக்கலம் உள்ளிட்ட ஏராளமான கழக முன்னணியின்ர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment