Saturday, February 27, 2016

தேர்தல் நிதியளிப்பு கலந்துரையாடல் மற்றும் வாழ்நாள் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு!

ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் 2016 க்கான சட்டசபை தேர்தல் நிதியளிப்பு கலந்துரையாடல் மற்றும் வாழ்நாள் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு 26-02-2016 மாலை 3 மணி அளவில் ஓமன் தலைநகர் மஸ்கட்டில். நவீன் அப்பார்ட்மன்ட் ரூவியில் நடந்தது. 

ஓமன் மதிமுக இணையதள உறுப்பினர்கள் வருகை தந்தவர்களை நவநீத கிருஷ்ணன், விஸ்வநாதன் ஆகியோர் வரவேற்றனர். கலந்துரையாடல் தொடங்க மறுமலர்ச்சி மைக்கேல் தலைமை தாங்கினார். கோவிந்தராஜ் அவர்கள் முன்னிலை வகித்தார். 

இந்த கலந்துரையாடலில் 1989 ல் கழக தலைவர் வைகோ அவர்கள் தமிழீழம் சென்று ஒரு மாதம் தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களுடன் தங்கி ராணுவ கட்டமைப்பு, தமிழீழ கட்டமைப்பு என அனைத்தையும் பார்த்து பக்கபலமாக இருந்துவிட்டு, விடுதலை புலிகளுக்கு நம்பிக்கை விதையை ஊட்டிவிட்டு தாயகமான தமிழகம் திரும்பும்போது, இந்திய அமைதிப்படை தாக்கியதில் கழக பொதுச் செயலாளர் வைகோ அவர்களை நோக்கி பாய்ந்த குண்டுகளை தன் மார்பில் தாங்கி மடிந்து தலைவர் வைகோ அவர்களை காப்பாற்றிய விடுதலை புலிகளின் மாவீரன் சரத் என்கிற பீட்டர் கென்னடி அவர்களின் தியாகம் பொருந்திய வீர மரணத்தின் நினைவு தினமான 26-02-2016 ல் நினைவு கூர்ந்து நாகேந்திர குமார் அவர்கள் சிறு நினைவு உரை நிகழ்த்தி 2 நிமிடம் அவரது நினைவாக மவுனம் கடைபிடிக்கப்பட்டது. 

மதிமுக வாழ்நாள் உறுப்பினர்களாக ஏற்கனவே விண்ணப்பித்த ஓமன் மதிமுக இணையதள அணி உறுப்பினர்களான, வைகோ  பாலா (எ) பாலகிருஷ்ணன், கனகராஜ், நாகேந்திர குமார், விஜயராகவன் ஆகியோருக்கு மதிமுக வாழ்நாள் உறுப்பினர் அட்டைகளை கையளித்து கவுரவிக்கப்பட்டது. 

ஒமன் மதிமுக இணையதள அணியினர், தலைமை கழகத்திற்கு தங்களது பங்களிப்பை இணையத்தின் மூலமாகவும், வாய்ப்புள்ள போது நேரடியாகவும், தேர்தல் காலங்களில் எவ்வாறு பணியாற்றுவது என விவாதிக்கப்பட்டது. அனைவரும் தங்கள் கருத்துக்களை எடுத்து கூறினார்கள்.

பின்னர் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் 1:

1. 2016 சட்டமன்ற தேர்தலுக்கு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் தேர்தல் நிதியை வருகிற மார்ச் மாதம் 30 ஆம் தேதிக்குள் திரட்ட முடிவெடுக்கப்பட்டது.

2. மதுரை பன்னாட்டு விமான நிலையத்திற்கு, மஸ்கட், ஓமனிலிருது நேரடி விமான சேவை வேண்டி வலியுறுத்தி திரட்டப்பட்ட கையெழுத்து ஆவணங்களை, தலைவர் வைகோ அவர்களிடம் கையளித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டுகோள் விடுத்து, விடுமுறை முடிந்து ஓமன் திரும்பிய ஓமன் மதிமுக இணையதள அணி உறுப்பினர்கள் விஸ்வநாதன், கணேசன் ஆகியோருக்கு நேரடியாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

3. 2016 சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், ஓமன் மதிமுக இணையதள அணியினர், தங்களால் இயலும் பட்சத்தில் விடுமுறை கிடைத்தால், தங்கள் மாவட்டத்திலுள்ள சொந்த தொகுதியில் மக்கள் நலக் கூட்டணி கட்சிகளான மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளின் சார்பில் எந்த கட்சியை சார்ந்த வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டாலும், அந்த வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்து வெற்றி பெற களப்பணியாற்றுவதன் மூலம், மக்கள் நலக் கூட்டணியை வெற்றியடைய செய்யவும் அனைத்து உறுப்பினர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

4. அனைத்து நண்பர்களும் இணையத்தில் மக்கள் நலக் கூட்டணியின் உண்மை தன்மையை எடுத்துரைப்பதுடன், குறைந்த பட்ச செயல் திட்டம் பற்றிய சிறு கருத்துக்களை எழுதி பகிரவும், மற்ற இணைய தோழர்களின் உண்மை கருத்துக்களை பகிர்ந்தும் இணைய பங்களிப்பை கூட்டி உலகளாவிய மக்களுக்கும் சென்றடைய செய்ய வேண்டிய கடமையையும் எடுத்து கூறி அனைவரும் கருத்துக்களை இணையம் மூல வேகமாக பரப்பவும் வலியுறுத்தப்பட்டது.

நன்றி உரையுடன் கூட்டம் நிறைவடைந்தது. இந்த நிகழ்வில், 
1. மறுமலர்ச்சி மைக்கேல்
2. நவநீத கிருஷ்ணன்
3. விஸ்வநாதன்
4. ராஜகுரு
5. கனகராஜ்
6. கோவிந்த ராஜ்
7. செல்வராஜ்
8. சக்திலிங்கம்
9. நாகேந்திரகுமார்
10. பிரேம் ஜாஸ்பர்
11. பால கிருஷ்ணன்
12. விஜயராகவன்
13.மதி வெங்கடேஷ்
14. சந்திரசேகரன்
15. முத்தையா

ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment