Friday, July 3, 2015

தமிழக அரசுக்கு பெரம்பலூர் மறுமலர்ச்சி மாணவர் மன்றம் "தே.தமிழருண் "கண்டனம்!

முல்லை பெரியாருக்கு விடுதலைபுலிகளால் ஆபத்து என கூறிய தமிழக அரசை கண்டித்து  பெரம்பலூர் மறுமலர்ச்சி மாணவர் மன்றம் தே.தமிழருண் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ் இனத்திற்கு தமிழக அரசு எந்த அளவிற்கு பாதுகாப்பு வழங்கி வருகிறது என்பதை உலகம் அறியும்... தமிழினத்தின் பாதுகாவலன் மேதகு பிரபாகரன் அவா்களும், அவா் இயக்கிய போா்ப்படை விடுதலைப் புலிகள் அமைப்பும் தமிழ் மண்ணில் இருந்த வரை ஒருப்பய தமிழனை சீண்ட முடியல.....

அப்படிப்பட்ட தலைவன் இயக்கிய அமைப்பால், தமிழக விவசாயிகளி்ன் குடும்பங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கின்ற முல்லைப் பொியாரு அணைக்கு விடுதலைப் புலிகள் அமைப்பினால் ஆபத்து என்று ‪‎தமிழக அரசு‬ கூறுவது நகைப்புக்கு உள்ளாகிறது....

தமிழினத்தின் கடவுளாக பிரபாகரன் இருக்கிறாா்... தமிழினத்தின் காவல் தெய்வங்களாக அவாின் புலிப்படை இருந்திருக்கிறது....

தமிழக அரசே!

தமிழினத்திற்கு உங்களால் தான் அழிவு வரும்.... விடுதலைப்புலிகளால் அல்ல.... தமிழ் மக்களின் தலையாாியாக தலைவா் வைகோ இருக்கும் வரை எந்த பயலும் தமிழன அழிச்சி சுகம் காண முடியாது... விடுதலைப்புலிகளால் அணைக்கு ஆபத்து என்று கூறும் ஜெயலலிதா  தலைமையிலான தமிழக அரசை தலைவா் வைகோவின் வழி நின்று வன்மையாக கண்டிக்கிறேன் என தனது அறிக்கையில் தே.தமிழருண் தெரிவித்துள்ளார்.

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment