Saturday, July 4, 2015

தாயகத்தில் காலை ஜி ராமகிருஸ்ணன் வைகோ சந்தித்தனர்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவை இன்று காலை சந்தித்து பேசினார். மதிமுக தலைமை அலுவலகமான தாயகத் தில் காலை 11 மணி முதல் 12 மணி வரை இந்த சந்திப்பு நடந்தது.

திரு. ஜி.ராமகிருஸ்ணன் மற்றும் திரு.ரங்கராஜன் அவர்களை ஜீவன் மற்றும் தென்றல் நிசார் ஆகியோர் வரவேற்று தாயகத்தினுள் அழைத்து சென்றனர். பின்னர் தலைவர்கள் பேசிகொண்டனர். அப்போது perfection என்றால் அது நீங்கள்தான் என்று தலைவர் வைகோவை பார்த்து மார்க்சிஸட் ரங்கராஜன் தெரிவித்துகொண்டார். அதே போல், என்ன ஞானம்... நீங்களே ராமானுஜர் தொடரை எடுக்கலாம் என திரு.சத்யா அவர்களை பார்த்து பாராட்டினார் திரு.ரங்கராஜன். 

பின்னர் செய்தியாளர்களை தலைவர்கள் சந்தித்தனர். அப்போது...

காங்கரசிலிருந்து மாறுபட்டது அல்ல பாஜக.  இந்துத்வா வகுப்பு வாத சக்திகளை புகுத்துகிறது. ஊழல் போக்கு, நில அபகரிப்பு சட்டம் போன்ற பிரச்சினை களுக்காக பேசினோம். மத்திய மாநில அரசுகளை கண்டித்து மதிமுக மார்க்சிஸ்ட் இணைந்து செயல்படும். மக்கள் பிரச்னைகளுக்காக ஒன்றிணைகிறோம். வைகுண்ட அணை தொடர்பாக மதிமுக எடுத்த முயற்சி யை பாராட்டுகிறோம். மத்திய, மாநில அரசுகளின் ஊழலுக்கு எதிராக கூட்டு குழு இயக்கம் தொடங்க முடிவு செய்துள்ளோம். ஒத்த கருத்துடைய கட்சி தலைவர்களை சந்தித்து இதற்கு ஆதரவு கேட்டு வருகி றேன். முதலில் வைகோவை சந்தித்து ஆதரவு கேட்டேன். அவர் இந்த கருத்தில் உடன்பாடு இருப்பதாக கூறி ஆதரவு தெரிவித்துள்ளார். .சட்டமன்ற தேர்தல் பிரச்சினை இப்போது எழவில்லை என ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

மக்கள் பிரச்னைகள் முன்னிறுத்தி மார்க்சிஸ்ட் தலைவர்களை சந்தித்தோம். சந்திக்க முடியாத ஒரே முதல்வர் ஜெயல்லிதா தான். ஊழல் செய்து இலவசங்களை வழங்குகிறார்கள் மாநில அரசு. வன்முறைசம்பவங்கள். நாள்தோறும் படுகொலை கள். அதிமுக அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழக்கிறார்கள்.ஆர் கே நகரில் 55% வாக்குப்பதிவு தான் ஆனது. செப்.2ஆம் தேதி நடக்கும் வேலைநிறுத்தத்தில் MLF பங்கேற்கும். 20 தமிழர்கள் அக்கிரமமாக படுகொலை செய்யப்பட்டனர்.இதில் CBI விசாரணை தள்ளி போவது நியாயமற்றது.சந்திரபாபு நாயுடு அரசுக்ககு தமிழக அரசு துணை போகிறது. ஏர்போர்ட் வரை மெட்ரோ ரெயில் வந்தவுடன் நான் பயணிக்கிறேன் என மதிமுக பொதுசெயலாளர் வைகோ தெரிவித்தார். 

பின்னர் தாயகத்துக்கு வருகை தந்த மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்களிடம் துணை பொது செயலாளர் அண்ணன் சத்யா மற்றும் காஞ்சி , திருவள்ளூர், தர்மபுரி,வடசென்னை,மத்திய சென்னை மாவட்ட செயலாளர்களையும், தோழர் விஜய் அசோகன் அவர்களையும் அறிமுகபடுத்தி வைத்தார். தன் தொண்டனை வருகை தரும் மற்ற கட்சி தலைவர்களிடையே அறிமுகப் படுத்தும் அரசியல் நாகரீகத்தின் சிகரம் தமிழின முதல்வர் வைகோ என் மீண்டும் உறுதிபடுத்தியுள்ளார்.

நிகழ்ச்சி முடிந்த பின்னர், வழக்கம் போல தலைவர்களை வாசல் வரை சென்று வழியனுப்பி வைத்தார் தலைவர் வைகோ....

செய்தி, புகைபட சேகரிப்பு: அம்மாபேட்டை கருணாகரன் முகநூல்

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment