Sunday, October 23, 2016

உலகக் கோப்பை கபடிப் போட்டியில் இந்திய அணி வெற்றிக்கு வைகோ வாழ்த்து!

உலகக் கோப்பை கபடித் தொடரில் எட்டாவது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டத்தைப் பெற்றுள்ளது மிகவும் பாராட்டத்தக்கது ஆகும். கபடி விளையாட்டை உலகிற்குத் தந்த இந்தியா உலகக் கோப்பையில் இதுவரை தோற்றதில்லை என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் ‘சடுகுடு’ எனும் பெயரில் நடந்துவந்த இந்தக் ‘கபடி’ விளையாட்டை பெருமளவில் ஊக்குவித்தவர் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்கள்தான் என்பதை நினைவுகூர்கிறேன்.

கபடிப் போட்டியில் உலகக் கோப்பையை வென்று நாட்டிற்கு பெருமையைத் தேடித் தந்த இந்தியக் கபடி அணி வீரர்களுக்கும், இந்திய அணியில் விளையாடிய தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக வீரர் சேரலாதனுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment