Friday, October 7, 2016

மத்திய அரசை கண்டிக்கும் திருவாரூர் ஆர்ப்பாட்டத்தில் மநகூ தலைவர்கள்!

காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச மன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுக்கும் மத்திய BJP அரசை கண்டித்து மக்கள் நலக் கூட்டியக்கத்தின் சார்பில் இன்று 07-10-2016 திருவாருர் தெற்கு வீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

காவிரி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளரும், மறுமலர்ச்சி திமுக பொதுச் செயலளாருமான திரு.வைகோ அவர்கள், மக்கள் நலக் கூட்டியக்கத்தின் தலைவர்கள் முத்தரசன், மார்க்ஸிஸ்டு முன்னணி நிர்வாகி, விசிக சார்பில் பொதுச் செயலாளர் ரவிகுமார் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன ஆர்ப்பாட்ட முழக்கங்களை எழுபினார்கள்.

இதில் ஏராளமான கழக மற்றும் கூட்டியக்க தொண்டர்கள் கலந்துகொண்டு போராட்டத்தை வெற்றியடைய செயதனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment