Wednesday, October 26, 2016

ஈழ மாணவர் படுகொலையை கண்டித்து, இலங்கை தூதரகம் முற்றுகை!

தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில், கடந்த 20 ஆம் தேதி ஈழத்தில் போலீசாரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட இரண்டு மாணவர்களின் நீதி வேண்டி, அந்த படுகொலையை கண்டித்து இன்று காலை சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்தினை முற்றுகையிட்டனர்.

இதில் தமிழர் அமைப்புகள் ஒன்று கூடி ஆர்ப்பாட்ட முழக்கங்களை எழுப்பினார்கள். இந்த போராட்டத்தில் மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, விசிக தலைவர் தொல் திருமாவளவன், கொளத்தூர் மணி, ஓவியர் சந்தானம், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் பண்ட்ருட்டி வேல்முருகன் மற்றும் முக்கிய ஈழ ஆதரவான தலைவர்களும் தொண்டர்களும் முற்றுகையில் ஈடுபட்டனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment