Tuesday, April 3, 2018

தீக்குளித்து உயிர் நீத்த சிவகாசி ரவியின் மனைவி அறிக்கை!

விருதுநகர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சிவகாசி அ.ரவி அவர்கள் நியூட்ரினோவை எதிர்த்து மதுரையில் தீக்குளித்து உயிர் தியாகம் செய்ததை கொச்சைப்படுத்தும் வகையில் அரசு உதவி கேட்டதாக என் கணவரின் தம்பி முருகன் கூறியதாக வெளிவந்துள்ள செய்தியை சிவகாசி அ.ரவி அவர்களின் மனைவி ர.முத்துலட்சுமி ஆகிய நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்தும், மத்திய அரசைக் கண்டித்தும், தலைவர் வைகோ அவர்களின் நடைப்பயணத் தொடக்க நிகழ்ச்சியில் என் கணவர் தீக்குளித்து தன் நோக்கத்தை மரண வாக்குமூலமாக நீதிபதியிடமும் கொடுத்தார்.

என் கணவரின் உயிர்த் தியாகத்தை எண்ணி எங்கள் தலைவர் வைகோ அவர்கள் எங்கள் குடுமபத்தைக் காப்பாற்றுவார். அரசின் உதவி எதுவும் தேவை இல்லை என தெரிவிக்கிறேன் என்று ரவியின் மனைவி ர.முத்துலட்சுமி அறிக்கை தந்துள்ளார் என 

மறுமலர்ச்சி தி.மு.க தலைமைக் கழகம் இன்று 03.04.2018 செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment