Friday, April 13, 2018

சித்திரைத் திருநாள்! வைகோ வாழ்த்து!

இளவேனில் காலம் விடைபெற்று, முதுவேனில் தொடங்குவதன் அடையாளம்தான் சித்திரை முதல் நாள் ஆகும்.

காவிரிப் பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தின் வஞ்சகத் தீர்ப்பு, மேற்குத் தொடர்ச்சி மலைகளை உடைத்து நொறுக்கும் நியூட்ரினோ எனும் நாசகாரத் திட்டம், ஹைட்ரோ கார்பன், மீத்தேன், சேல் கேஸ் எனும் பேரழிவுத் திட்டங்களைச் செயல்படுத்தி, காவிரி வேளாண் மண்டலத்தைப் பெட்ரோலிய மண்டலமாக, தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கத் திட்டம் வகுத்துள்ள மத்திய அரசின் கேடுகள் பெரும் கவலையை அளித்துள்ள போதிலும், அவை அனைத்தையும் எதிர்த்துப் போராடும் உறுதியைத் தமிழகம் பெற்றுள்ளது.

தமிழ் மண்ணுக்குப் புதுப் பொலிவூட்டிடக் கடமை ஆற்றுவோம்; களத்தில் வெற்றியும் காண்போம்!

‘விவசாயிகளுக்கு வசந்தம் பிறக்கும்; வாழ்வு சிறக்கும்’ என்ற நம்பிக்கையை சித்திரைத் திருநாள் விதைக்கட்டும்.

தரணி எங்கனும் வாழும் தமிழ் மக்களுக்கு சித்திரை முதல்நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் தனது அறிக்கையில் வாழ்த்துக்களை இன்று 13-04-2018 அன்று தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment