Thursday, November 26, 2015

பெரம்பலூரில் தேசிய தலைவர் பிறந்தநாள் கொண்டாட்டம் 12 நள்ளிரவில்!

26/11/2015 அன்று பெரம்பலூர் மாவட்ட அவைத்தலைவர் செல்ல கதிர்வேல் மற்றும் மாவட்ட பொருளாலர் எஸ்.ஜெயசீலன் தலைமையில் தமிழீழ தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டமானது,  மதிமுக மாணவரணி, மாணவர் மன்றம் சார்பாக புதிய பேருந்து நிலைய த்தில் நள்ளிரவு 12.00 மணிக்கு பொது மக்கள் மற்றும் பயணிகளுக்கு இனிப்பு வழங்கி, பட்டாசு வெடி த்து கொண்டாடப்பட்டது. 

இதில் பெரம்பலூர் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அண்ணன் சே.பிரபாகரன் அவர்களும், பெரம்பலூர் மாவட்ட மாணவர் மன்ற அமைப்பாளர் சைமன் அவர்களும், பெரம்பலூர் மாவட்ட மாணவர் மன்ற துணை அமைப்பாளர் தே.தமிழருண் அவர்களும் மற்றும் கழக ஏனைய உடன்பிறப்புகளுக் கலந்துகொண்டனர். 

பிறந்த நாளை மக்களோடு மக்களாக கொண்டாடி மகிழ ஏற்ப்பாடு செய்த கழக மாணவரணி, மாணவர் மன்ற பொறுப்பாளர்களுக்கு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment