Monday, November 2, 2015

நவம்பர் 3 ல் நாகர்கோயிலில், உணவு பொருட்களின் விலையேற்றத்தை கட்டுபடுத்தாத மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

மக்கள் நலக்கூட்டியக்கத்தின் சார்பில், உணவு பொருட்களின் விலையேற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்தும், வெளிச்சந்தையில் உணவுப்பொருட்களின் விலையை குறைக்க வலியுறுத்தியும், கன்னியாகுமரி மாவட்ட தலைநகரமான நாகர்கோயிலில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நவம்பர் மாதம் 3 ஆம் நாள் காலை 11 மணி அளவில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. எனவே மக்கள் நலக்கூட்டியக்கத்தை சேர்ந்த அனைத்து தோழர்களும் தவறாது கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெற செய்ய ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் அன்போடு அழைக்கிறோம். திரண்டு வாரீர்.

ஓமன் மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment