Tuesday, November 17, 2015

நவம்பர் 25 இல் திருச்சியில், மக்கள் நலக் கூட்டணி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

மக்கள் நலக் கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்ட விளக்கப் பொதுக்கூட்டத்தை டிசம்பர் 12 ஆம் தேதி அன்று மதுரையில் பெரும் சிறப்புடன் வெற்றிகரமாக நடத்துவது குறித்தும், அடுத்த கட்ட செயல்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளவும் கூட்டணியின் அங்கங்களான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய நான்கு கட்சிகளின் அனைத்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், நவம்பர் 25 ஆம் தேதி அன்று திருச்சி மாநகரில் பெமினா ஹோட்டல் கூட்ட அரங்கத்தில் காலை 10 மணி தொடங்கி, மாலை 6 மணி வரை நடைபெறும்.


மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் அதில் பங்கேற்பார்கள். அனைத்து மாவட்டச் செயலாளர்களும் தவறாது கலந்துகொள்ள வேண்டுகிறேன் என வைகோ தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment