Tuesday, November 3, 2015

அமைப்புச் செயலாளர், வெளியீட்டு அணிச் செயலாளரை அறிவித்தது தாயகம்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழகமான தாயக வெளியிட்டுள்ள அறிவிப்பில், கழக வெளியீட்டு அணிச் செயலாளர் திரு. அ. வந்தியதேவன் அவர்கள் (முகவரி: ‘பெரியார் இல்லம்’ சுப்பிரமணியபுரம், கடலூர் மாவட்டம் - 607 301; கைப்பேசி எண். 94430 - 49151) அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, கழக அமைப்புச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சங்கொலி மக்கள் தொடர்பாளர் திரு. நவபாரத் நாராயண ராஜா அவர்கள் (முகவரி: நவபாரத் மெட்ரிகுலேசன் பள்ளி, ஜவகர் மைதானம் அருகில், இராசபாளையம் - 626 117, விருதுநகர் மாவட்டம்; கைப்பேசி எண். 94425 - 52779) அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, கழக வெளியீட்டு அணிச் செயலாளராக நியமிக்கப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்புக்குரிய வழிகாட்டிகள் கழகத்தின் அமைப்புகளை மேம்படுத்தவும், அதை வெளியிட்டு மக்களிடத்தில் எடுத்து செல்லவும் தீவிரமாக களமாட ஓமன் மதிமுக இணையதள அணி வாழ்த்துதலை தெரிவித்துக்கொள்கிறோம்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment