Tuesday, November 17, 2015

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பசியாற்றினார் தமிழின முதல்வர் வைகோ!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், இன்று (17.11.2015) காலை 8 மணி அளவில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை அண்ணா நகர் சாந்தி காலனி அருகில் உள்ள எம்.ஜி.ஆர். காலனி மக்களைச் சந்தித்து அவர்களுக்கு பொங்கல், பிரட் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கினார்.

மத்திய சென்னை மாவட்டப் பொறுப்பாளர் ரெட்சன் சி.அம்பிகாபதி, அண்ணா நகர் பகுதிப் பொறுப்பாளர் இராம.அழகேசன், எழும்பூர் பகுதிச் செயலாளர் தென்றல் நிசார், ஆயிரம்விளக்குப் பகுதிப் பொறுப்பாளர் டி.ஜெ.தங்கவேலு, ஏ.எஸ்.ராஜி, சித்திரைவேலு, எம்.பழனி, கிருபாகரன், மு,மாயன், சகாய அரசி, முத்துக்குமார், திருலோகசுந்தர், நாஞ்சில் மணி, பழக்கடை நடராஜ், எஸ்.கே.குமார், அம்மா முருகன், திராவிட முனுசாமி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment