Friday, November 27, 2015

வடசென்னை மதிமுக சார்பில் மாவீரர் நாள் கூட்டம் வைகோ வீர உரை!

தமிழீழ வீரர்களை இறந்தவர்களை நினை கூறும் தினமானது மாவீரர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அனைத்தும், தமிழின முதல்வர் தலைமையில் படை நடத்த தயாராக இருந்தது. செங்காந்தள் மலரோடு வீர வணக்கம் செலுத்த தமிழ்வாளர்கள்.

ஓவியர் வீர.சந்தானம் மற்றும் தோழர் வே.பொன்னையன் வருகை புரிந்தார்கள். அப்போது ஜீவன் அவர்கள் ஐயா சந்தானம் அவர்களின் உடல் நலனை விசாரித்தார்கள்.

துணைப் பொதுச் செயலாளருடன் இயக்குநர் கவுதமன்.ஐயா பெ.மணியரசன் ஆகியோர் வருகைபுரிந்தனர்.

பினர் தலைவர் வைகோ மற்றும் புலமைப்பித்தன் அவர்கள் வருகை புரிந்தார்கள். ஜீவன் அவர்கள் சென்று வரவேற்றார். பின்னர் கூட்ட ஏற்பாட்டை பார்வையிட்டார் தலைவர். 

தலைவர்கள் கைகளில் கார்த்திகை பூ கொடுக்கப்பட்டது. மெழுகுவர்த்தியும் கொடுத்து, பின்னர் மாவீரர் ஜோதி ஏற்றப்பட்டது. தலைவர்கள் பின்னால் தொண்டர்களும், இணையதள அணியினரும் ஜோதி ஏற்றினர். பின்னர் தலைவர் வைகோ அவர்கள், உறுதி ஏற்போம், உறுதி ஏற்போம், தமிழீழத்தை நிர்மாணிக்க உறுதி ஏற்போம், உறுதி ஏற்போம், வீர வணக்கம், வீர வணக்கம் மாவீரர்களுக்கு வீரவணக்கம் என வீர முழக்கமிட்டனர்.

ஆவடி அந்தரிதாஸ் தொகுத்து வழங்க, தொடர்ந்து பேசிய விவசாய அமைப்பு பொன்னையன் அவர்கள், தடைகளை உடைத்து இந்த மாவீரர் நாள் நிகழ்வை நடத்தும் உங்களை (வைகோ) பாராட்டுகிறோம் என்றார். 

தொடர்ந்து தமிழ்ப் புலிகள் நாகை.திருவள்ளுவன் அவர்கள் வீர வணக்க உரையாற்றினார்.

அன்னை மாரியம்மாள் அவர்கள் வைகோவிற்கு அன்னை மட்டுமல்ல, எனக்கும் அவர்கள் அன்னைதான், என உணர்ச்சியுடன் உரை துவக்கினார் கவிஞர் புலமைப்பித்தன் அவர்கள். 

போர் வீரரை பெற்றெடுத்த அன்னை மாரியம்மாள் அவர்களுக்கு வீர வணக்கம். எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் அன்னை வளர்க்கையிலே! என்பதற்கேற்ப வளர்த்த புயல் இங்கே அமர்ந்திருக்கிறது என தலைவரை சுட்டிகாட்டினார்.

பிரான்சில் 130 பேருக்காக கொதித்தெழுந்த சமுதாயம் ஒன்றரை லட்சம் தமிழ் உறவுகள் அமைதி காத்தது ஏன் என கேள்வியும் எழுப்பினார்

இயக்குநர் கவுதமன் பேசுகையில், இப்போது 14 ஆண்டுகளுக்கு பிறகு நீர் எப்படி மீண்டும் தன் இடத்தை அடைந்ததோ, அது போலவே ஈழத்திலும் நடக்கும் என்றார். 

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமா அவர்கள் மாவீரர் நாள் நிகழ்வுக்கு வருகை புரிந்தார்.

எழிலுற மாவீரர் மேடை அமைத்த தோழர் ராஜேஷ் அவர்களுக்கு தலைவர் வைகோ பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.

புலிச்சட்டை போட்டிருந்ததால் தலைவர் வைகோவுக்கு பினாங்கு செல்ல சிங்களவன் தடை விதிக்க பார்த்தது. தமிழின துரோகம் செய்த கட்சிக்கு பழி தீர்க்க வேண்டிய தேர்தல் 2016. உன் தலைமைக்காக எம்மினத்தை அழித்தவர்களை விடக்கூடாது என சந்தானம் பேசினார்.

தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பெ.மணியரசன் அவர்கள் வீர வணக்க உரை நிகழ்த்தினார். 

அன்னை பார்வதி அம்மாள், அன்னை மாரி அம்மாள், செந்தூரன் மற்றும் மாவீரர்கள் மறைவுக்கு ஒரு நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் பேசிய திருமாவளவன் அவர்கள் தடை தாண்டி இந்த மாவீரர் நாள் நடத்துவதற்கு தலைவர் வைகோ அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன் என உரை துவக்குகினார்.

தமிழின உணர்வாளர்களை ஒருங்கிணைக்க அண்ணன் வைகோ அவர்கள் உலகம் முழுவதும் சுற்று பயணம் செய்து உலகத்தமிழர்களை ஒன்றிணைக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தார்.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றே தமிழீழம் சாத்தியப்படும். அதற்கு தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும். அதை ஒருங்கிணைக்க கூடிய தகுதியும் திறமையும் அண்ணன் வைகோ அவர்களுக்கு உண்டு. அந்த பொறுப்பை அண்ணன் ஏற்க வேண்டும் எனவும் கூறினார்.

தமிழின முதல்வர் மாவீரர் நாள் உரை டொடங்கி பேசியவர், தடை என்றாலும் தாயகத்தில் இந்த விழா நடந்திருக்கும். ஆஸ்லோ மாநாட்டிற்கு நான் செல்ல வேண்டும் என பிரபாகரன் ஆசைப்பட்டார். கலைஞர் கருணாநிதி அவர்களின் ஈழத்தமிழர் துரோகத்தை மன்னிக்க முடியாது. மக்கள் எனக்கு எந்த பதவியை தரவில்லையென்றாலும் ரோட்டில் வைத்தாலும் அங்கு நின்று தமிழர்களுக்காக பாடுபடுவேன்.

அன்னை மாரியம்மாள் நினைவுடன் அன்னை பார்வதி அம்மாள் நினைவுகளோடு ஒப்பிடும்படியாக நினைவு கூர்ந்தார். 

சுதந்திர தமிழீழத்திற்கு ஒரே தீர்வு பொது வாக்கெடுப்பு என்று ப்ரேசல்ஸ் மாநாட்டில் முன் எடுத்ததைதான் என் வாழ்நாள் சாதனையாக கருதுகிறேன், அது நடக்கும். 

மனிதன் லட்சியங்களுக்காக வாழ வேண்டும். மனிதனுக்கு மரணம் உண்டு. லட்சியங்களுக்கு மரணமில்லை. பதவி வகித்தவர்கள் இன்று நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறுகிறார்கள் என பேசினார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment