Wednesday, March 30, 2016

ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சி தோழர்கள் மதிமுகவில் இணைகிறார்கள்!

கரூர் மாவட்ட கழகத்தின் சார்பில் இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி இணைந்து மாற்றுக்கட்சி தோழர்கள், இளைஞர்கள், அரசியல் கட்சி சாராதவர்களை மதிமுகவில் இணைக்கும் விழாவை கரூர் V.M.C மகாலில் ஞாயிற்றுக்கிழமை 03-04-2016 காலை 10 மணி அளவில் நடக்கிறது. 

சிறப்பு அழைப்பாளர்களாக கழக கொள்கை விளக்க அணிச் செயலாளர் பொடா அழகுசுந்தரம், கழக மாணவர் அணிச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம், கரூர் மாவட்ட கழக பொறுப்பாளர் கபினி கே.கே.சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். 

மாவட்ட கழக நிர்வாகிகள், அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள், ஒன்றிய, நகர கழக செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment