Sunday, March 6, 2016

நவபாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார் வைகோ!

ராசப்பாளையம்-எஸ்.இராமலிங்காபுரத்தில் கழகத்தின் வெளியீட்டு செயலாளர் நவபாரத் நாராயணராஜா அவர்கள் நிறுவியுள்ள நவபாரத் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி கட்டிடம் திறப்பு விழா, 06.03.2016 இன்று காலை  10:00 மணிக்கு நடந்தது. 

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள்  பள்ளியின் புதிய கட்டடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைக்க,  வைகோ அவர்களின் துணைவியார், ரேணுகாதேவி அவர்கள் குத்து விளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார். 

உரை நிகழ்த்திய வைகோ அவர்கள், கற்க கசடற கற்ற பின் நிற்க அதற்கு தக என்று தனது உரையை தொடங்கினார்.

இராசபாளையம், தமிழ்நாட்டுக்கு முதலமைச்சரை தந்த நகர், விருதுநகர் மாவட்டம் 2 முதலமைச்சர்களை தந்தது என்றும் புகழாரம் சூட்டினார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment