Thursday, March 10, 2016

ஷேல் வழக்கிற்கு தென்மண்டலத்திற்கான தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வைகோ!

"டெல்டா மண்ணின் பாதுகாவலர்" மதிமுக பொதுச் செயலாளர், வைகோ அவர்கள் இன்று 10-03-2016 காலை 10:00 மணிக்கு, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தென்மண்டலத்திற்கான தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வந்தார். 

வைகோ அவர்கள் பங்கேற்ற ஷேல் வழக்கு அரசாங்க தரப்பு பதில் தர நேரம் ஒதுக்கி ஏப்ரல் 7 க்கு ஒத்தி வைக்கப்பட்டது. 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ அவர்கள், விவசாயிகளுக்கு எதிராக ஜெயலலிதா அரசு செயல்படுகிறது. காவல்துறை கந்துவட்டிக்காரர்களின் கூலிப் படையா என கேள்வி எழுப்பினார்.

தஞ்சை மாவட்டத்தில் டிராக்டர் கடன் வசூலிப்பதற்காக விவசாயியை அடித்து துன்புறுத்திய காவலர்கள் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

ஓமன் மதிமுக இணையதள அணி.

No comments:

Post a Comment