Thursday, March 3, 2016

குமாரபுரம் பேரூராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து தெருமுனை கூட்டம்!

கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம் பேரூராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து குமாரபுரத்தில் 2-3-2016 மாலை 4 மணி அளவில் மக்கள் நல கூட்டணி சார்பாக கண்டன தெருமுனை கூட்டத்தில், பெருஞ்சிலம்பு அரசு உயர்நிலை பள்ளிக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க மறுக்கும் பேரூராட்சி தலைவியை கண்டித்தும், செயல் அலுவலரை கண்டித்தும் போராட்டம் நடைப்பெற்றது.

இதில் மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினர். 

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment