Wednesday, March 2, 2016

சேலம் மாநாடா பொதுக் கூட்டமா! மக்கள் நலக் கூட்டணியின் எதிரணியினர் திகைப்பு!

மக்கள் நல கூட்டணி தேர்தல் பிரச்சாரத்தில் மாநாடு போன்று மக்கள் வெள்ளம் அலை மோதுகிறது. சேலத்தில் நடைபெற்ற மக்கள் நல கூட்டணி பொதுகூட்டத்தில் அதிமுக திமுக வேண்டாம் மக்கள் நல கூட்டணியே போதும் என்று விண்ணதிர முழங்கிய லட்சக்கணக்கான மக்கள்.

மாற்றம் நிகழும், அதற்கான மக்கள் எழுச்சிதான் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் செல்லுமிடங்களிலெல்லாம் நடக்கிறது.

வருகிற 2016 தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி வெற்றி பெறும் ஆட்சி அமைக்கும். மதுவிலக்கை அமல் படுத்தும். ஊழலை ஒளிக்க உயர் மட்ட ஊழல் ஒழிப்பு சட்டமான லோக் ஆயுக்தா சாட்டமாக்கப்படும். பாமர முதல் முதல்வர் வரை இந்த சட்டம் பொருந்தும்.

மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி அமைத்து, சிறந்த மருத்துவ வசதி செய்து தரப்படும். தரமான கல்விக்காக அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு கல்விதரம் மேம்படுத்தப்படும். வேலை வாய்ப்புகள் ஏற்ப்படுத்தி தரப்படும்.

மக்கள் நலக் கூட்டணிக்கு இளைஞர்கள் வாக்களிக்க தயாராக இருக்கின்றனர். வெற்றி பெறும் பட்சத்தில் தமிழக காக்கப்படும்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment