Wednesday, May 6, 2015

மதிமுக 22 அகவை தாயகத்தில் வைகோ கொடியேற்றினார்!

பல இன்னல்களை கடந்து 22 வருடமாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தை கட்டி காத்தோம். ஏளனங்கள், இருட்டடிப்புகள், பொருளாதார மந்தம், அரசியலில் சதி, இவையெல்லாம் தாண்டி மதிமுக தனது 22 ஆவது ஆண்டு தினத்தை வெற்றிகரமாக இன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்படுகிறது. 

மறுமலர்ச்சி திமு கழகத்தின் தலைமை செயலகமான தாயகத்தில் இன்று காலை 10 மணி அளவில் பெரியார் மற்றும் அண்ணா வின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வாழ்க கோசங்களை எழுப்பி, கழக கொடியேற்றி பின்னர் கழகத்தினருக்கு இனிப்புகளையும் வழங்கினார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள். இந்நிலையில் செய்தியாளர்களும் சூழ்ந்துகொண்டனர்.

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment