Wednesday, May 6, 2015

ஆலந்தூரில் மதிமுக 22 ஆம் ஆண்டு பொதுக்கூட்டத்தில் மக்கள் வெள்ளம்!

மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 22 ஆம் ஆண்டுத் தொடக்க விழா பொதுக்கூட்டம் ஆலந்தூர், ஆதம்பாக்கம் பகுதி, டாக்டர் அம்பேத்கர் திடலில் (பரங்கிமலை இரயில் நிலையம் அருகில்) எழுச்சியுடன் துவங்கியது. கழகப் பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். 

புகழ்செல்வி பரணிபாவலன் 100வது இதழை வெளியிட்டு வாழ்த்து பெற்றார். 

மதிமுக இணையதள அணியின் தோழர்கள் முன் வரிசையில் அமர்ந்து நிகழ்ச்சியை உடனுக்குடன் உலக தமிழர்களுக்காக, கழகத்தின் கண்மணிகளுக்காக பதிவேற்றம் செய்கின்றனர். கறுப்புத் துண்டு தலைவர் வைகோ அவர்களுக்கு உற்றத் துணையாய் தாயகத்தில் பணியாற்றும் கறுப்புத்துண்டு திரு.தமிழ் மறவன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். மொழிப்போர் போராட்டங்களை ஆலந்தூர் செல்வராஜ் விவரித்தார். அண்ணன் பாலவாக்கம் க சோமு, திருவள்ளுவா் மாவட்ட செயலாளா் அண்ணன் D.R.R. அவா்கள் ஆகியோர் உரையாற்றினர். தமிழ்நாட்டுக்கு பெற வேண்டிய நிதியை கூட பெற வக்கற்ற எம்பிக்களை பார்க்கும்போது, தலைவர் நாடாளுமன்றத்தில் இல்லாததை நினைக்கவேண்டி இருக்கிறது என DRR செங்குட்டுவன் பேசினார். மற்ற கூட்டங்களுக்கும் மதிமுக கூட்டத்திற்கும் உள்ள வித்தியாசத்தை விளக்கினார் திரு.பாலவாக்கம் சோமு.

ஆணுக்கு முக்கிய வயதான 21ஐ மதிமுக தாண்டுகிறது, இனி வெற்றி வரும் என மதிமுக சட்டதுறை செயலாளர் திரு.தேவதாஸ் உரை நிகழ்த்தினார்.

தென்சென்னை மாவட்டம் சாா்பாக தலைவருக்கு தங்க கடிகாரம் வழங்கி உரையாற்றினார் அண்ணன் மணிமாறன்.

பொதுக்கூட்டம் உணர்ச்சிகரமாக நடந்துகொண்டிருக்கிறது. தலைவரின் உரைக்காக கழகத்தின் கண்மணிகள் விழி மூடாமல் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment