Sunday, May 10, 2015

அடுப்பங்கரையில் கூனி குறுகப் போகும் சம்பத்துக்கு கடுங்கண்டனம்!

கடந்த வாரம் வெளியான குமுதம் இதழில், மதிமுகவிற்கு துரோகம் செய்துவிட்டு சென்ற நாஞ்சில் சம்பத்,  தலைவர் வைகோவை பற்றி குமுதம் நிருபர் "வைகோவும் ஆந்திர போலீசின் துப்பாக்கி சூடு விவகாரத்தில் தமிழக அரசை குறை கூறுகிறாரே?" என்று கேட்ட கேள்விக்கு... 

சம்பத்தின் பதில்: 

மதிமுக என்கிற இயக்கம், வைகோ கண் முன்னாடியே கரைந்துகொண்டிருக்கிறது. அது பற்றி வைகோவுக்கு கவலையில்லை. கட்சி தழைக்க இல்லை, பிழைக்கவே வழியில்லாத நிலைமையில்தான் இருக்கிறது. அதுபற்றியும் அவருக்கு கவலை இல்லை. அழையா விருந்தாளியாக, டெல்லிக்கும், கொல்கத்தாவிற்கும் போய், அங்குள்ள தலைவர்களுடன் நின்று போட்டோ எடுத்து வருகிறார். தினம் தினம் ஏதாவது அறிக்கை விட்டுகொண்டே இருக்கிறார். அவர் ஒரு எமோக்ஷனல் லீடர் வேறென்ன சொல்ல...

என தனது வக்கிரத்தை வெளிப்படுத்தியுள்ளார் அதிமுகவின் நாஞ்சில் சம்பத் 

என்னருமை தோழர்களே!

கண்ணுக்கு எட்டுகின்ற தூரத்தில் மலைகளும், கடல்களும், அருவிகளும், ஆறுகளும், வயல்களும் நிறைந்த நாஞ்சில் நாடு என அன்போடு அழைக்கப்படும், என்னை பெற்றெடுத்து தாலாட்டி, சீராட்டுகின்ற எழில் கொஞ்சும் குமரி மாவட்டத்தில் பிறந்தவர்தான் எங்கள் மாவட்டத்தின் அன்பு மொழியை அடைமொழியாக வைத்திருக்கும் சம்பத். மதிமுகவின் பொதுச்செயலாளருக்கு அடுத்த வரிசையில் இரண்டாம் தலைவராக வலம் வந்தவர். தனது இலக்கிய நடை கலந்த பேச்சால், தமிழகத்தை தன் பக்கம் கட்டி போட்டவர். ஆனால் அவர் கருணாக்களுக்கு ஒப்பானவரானார். 

ஆம்... வசதியில்லாதவர்களுக்கெல்லாம் வாய்ப்பளித்து பசியாற்றும் எங்கள் மாவட்டத்தில் அனேகமாக இரக்க குணமுடையவர்களை காண முடியும். நாலு பேருக்கு நல்லதையே செய்ய விரும்புவார்கள். அப்படிபட்ட மாவட்டத்திலே பிறந்து, தன்மான தமிழர்களின் மத்தியில் நெஞ்சை நிமிர்த்து வலம் வந்திருக்கிறது ஒரு கருநாகம். 

துரோகிகள் எல்லோருமே முதல் தமைமைக்கு அடுத்து இருக்க கூடிய இரண்டாம் இடத்தில் பணியாற்றிய கரு நாகங்கள் தான். தமிழர்களின் தாயகமான தமிழீழத்தை அழிக்க பணத்திற்காகவும், பதவிகளுக்காகவும், வக்கிரங்களுக்காகவும் துரோகம் செய்தவன் கருணா அம்மன். 

தமிழீழ இறுதி போர் நடைபெற்ற காலங்களில், உலக தமிழர்களெல்லாம் இந்திய திருநாட்டை போரை நிறுத்துங்கள் என்று கூக்குரலிட்டபோது, தன் குடும்பத்திற்காகவும், பணத்திற்காகவும் இந்திய திருநாட்டை ஆண்ட அமைச்சரவையிலே இரண்டாம் நிலையில் அங்கம் வகித்த கலைஞர் கருணாநிதி என்ற கொடிய கருநாகம் அமைச்சரவையை விட்டு வெளியில் வராமல், உண்ணாவிரத மகா பொய் பித்தலாட்ட நாடகம் ஒன்றை ஒன்றரை மணி நேரம் நடத்தி முள்ளிவாய்க்காலிலே 175000 தமிழர்களை ரசாயன குண்டுகளாலும், கொலை செய்தும், தாய்மார்களை கற்பழித்தும் தமிழர்களை கொன்று திட்டமிட்ட இனப்படுகொலைக்கு காரணமாக இருந்து உலக தமிழருக்கே துரோகத்தை இழைத்தார்.

இந்த நாஞ்சில் சம்பத் இழைத்த துரோகமோ தமிழினத்தை அழிக்கும், ஸ்டெர்லை நாசகார ஆலையிலிருந்து வெளியாகும் நச்சு காற்றினால், அதன் சுற்று வட்டார பகுதி மக்கள் காச நோயாலும், புற்று நோயாலும் தினம் தோறும் அல்லல் படுவதை தடுக்க, அந்த ஆலையை மூடி தமிழகத்தை காக்க 18 வருடமாக தன்து சொந்த காசை செலவழித்து நீதிமன்றத்தில் போராடிய, இன்னும் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கின்ற தமிழின தலைவர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு தெரியாமல், ஸ்டெர்லைட் வழக்கை தோற்கடிக்க ஸ்டெர்லை ஆலை உரிமையாளரிடம் இருந்து பணத்திற்காக பேரம்பேசிய, பணத்தாசை பிடித்த நாஞ்சில் சம்பத், தலைவர் வைகோவின் கூடவே இருந்து குழிபறிக்க நினைத்தார். இதை கண்டு பிடித்த மாத்திரத்திலே கட்சியிலிருந்து வெளியேறி தலைவர் அவர்களை சாரைப்பாம்பு என்று ஊடகத்திலே பேட்டியளித்தார். அப்படிபட்ட சம்பத் மதிமுக விலே நெஞ்சை நிமிர்த்து வலம் வந்த காலத்தில்தான், ஜெயலலிதாவை பார்த்து அவர் ஒரு சர்வதேச விபச்சாரி என்று சொன்னார். அப்போது ஜெயலலிதாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை சம்பத்தை. ஏனென்றால் வைகோ அவருக்கு அரணாக இருந்தார். 

இந்நிலையில் துரோகமிழைத்து மதிமுக நமக்கில்லை என்றானவுடன், தன்னை காப்பாற்றி கொள்ள ஜெயலலிதாவின் காலடியில் விழுந்து நக்கி பிழைக்க தொடங்கினார்.

இப்போது, தமிழருக்கு துரோகம் செய்த சம்பத் தலைவர் வைகோவை பற்றியும், கழகத்தை பற்றியும் அவதூறாக பேட்டி கொடுத்துள்ளார். இதை ஓமன் மதிமுக இணையதள அணி வன்மையாக கண்டிக்கிறது. 

தலைவர் வைகோ பொடா சிறையிலே இருந்த போது கழகத்தின் கண்மணிகளுக்கு அன்புக் கட்டளையிட்டு வீதிவீதியாக பணம் வசூலித்து இடித்து தரைமட்டமாக்கப்பட்ட தன் வீட்டிற்கு பதிலாக புதிய வீட்டை கட்டி கொடுக்க கோடியை கொடுத்தோமே! வீடு கட்டிபோக மீதமிருந்த பணத்தையும் பெருந்தன்மையோடு தங்கள் செலவிற்காக கொடுத்தோமே! அந்த வீட்டில்தானே இன்றளவும் தங்கள் குடும்ப வாழ்கிறது என்பது தங்களுக்கு மறந்து போய்விட்டதா சம்பத் அவர்களே! 

நிறை குடம் கூத்தாடாது என்பது போல தலைவர் அமைதியாக இருக்கிறார். ஆனால் குறை குடம் கூத்தாடும் என்பதை நீங்கள் நிரூபித்துக்கொண்டிருக்கிறீர்கள் உங்கள் துரோகத்தாலும், ஏளன பேச்சுக்களாலும். 

தலைவர் வைகோ கண் அசைத்தால் அகிலமே அதிரும்படியாக தங்கள் படைபலத்தை உபயோகிக்க மதிமுக தொண்டர்கள் தயங்கமாட்டார்கள் என தங்களுக்கு சொல்லிதர வேண்டியதில்லை. எனவே மறுமடியும் இதுபோன்ற வசைபாடல் வேண்டாமென எனது மாவட்டத்தின் குடிமகன் என்ற முறையில் கேட்டுகொள்கிறேன்.

மதிமுக கழக கண்மணிகள் செய்யவேண்டிய பணிகள் ஏராளம் உள்ளன... சூரியனை பார்த்து மன நலம் சரியில்லாத, தெரு நாய் குரைப்பது போலதான் உங்களது நிலைமையும். மதிமுக என்பது தமிழகத்திற்கான சூரியன். எங்களால்தான் வெளிச்சத்தை கொடுக்க முடியும் என்பதை மக்கள் உணர்ந்துள்ளார்கள். மதிமுக வளர் பிறை என்பதை நீங்கள் கண் குளிர பார்க்கத்தான் போகிறீர்கள். அப்போது அரசரவையில் இருக்க வேண்டிய நான், அண்டி ஒடுங்கி அடுப்பங்கரையிலே இருக்கிறேனே என்று எண்ணி குன்றி கூனி குறுகி போகும் காலம் வெகு தூரத்தில் இல்லை எனவும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 

கால சக்கரம் சுழல ஆரம்பித்திருக்கிறது. எங்கள் ஆட்சி நடைபெறும், நீங்கள் துக்கி எறியப்படுவீர்கள் என எங்கள் கழக கண்மணிகள் நன்கு அறிவர். எனவே கழகத்தின் கண்மணிகளே! தேவை இல்லாதவற்றிற்காக நமது நேரத்தை விரயமாக்காமல், நமது மக்கள் பணிகள் மூலம் நாம் வீறுகொண்டெழுவோம், வெற்றிக் கொடியேற்றுவோம்.

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment