Friday, May 8, 2015

மதிமுக 22 ஆம் அகவை பொதுக்கூட்டத்தில் தலைவரின் உரை!

கழகத்தின் கண்மணிகளே! 

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் 22 ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் ஆலந்தூரிலே 06-05-2015 நேற்று பெரும் சிறப்பாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடினர். வேறு கட்சிகளாக இருந்தால் இப்படிப்பட்ட பெரும் கூட்டத்தை சேர்க்க பல கோடிகள் செலவு செய்யவேண்டியிருக்கும். ஏனென்றால் பணத்தை கொடுத்துதானே பல கட்சிகள் கூட்டத்தை வரவழைக்கின்றனர். 

மதிமுகவிற்கு மட்டும் தான் தன்மான தமிழர்களும், தியாக வேங்கைகளும், கொடையுள்ளம் கொண்டவர்களும் வருகை தந்திருந்தார்கள். இந்த மாபெரும் விழாவிலே கலந்துகொள்ள முடியவில்லையே, தலைவரின் உணர்ச்சிகரமான பேச்சை கேட்க முடியவில்லையே என்ற வெளிநாடுகளில் வாழும் கழக கண்மணிகளின் கண்களுக்கும், செவிகளுக்கும் சிறுது இளைப்பறுதலை தர கழகத்தின் 22ஆம் ஆண்டுவிழாவில் தலைவர் வைகோ அவர்கள் வீர முழக்கமிட்டதை காணொளியாக இணைத்திருக்கிறேன். கேட்டு மகிழ ஓமன் மதிமுக இணையதள அணியின் சார்பில் அன்போடு கேட்டுகொள்கிறோம்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment