Friday, May 1, 2015

வைகோவை வாழும் பெரியார் என கூறிய திகம்பர்னாத் பாண்டே!

இவர்தான் பெரியார்......
மாநிலங்களவைத் தலைவர் பொறுப்புவகித்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் திகம்பர்னாந்த் பாண்டே, தலைவர் மீது மிகுந்த அன்பு கொண்டவர்.....

"காங்கிரஸ்காரர்கள் அந்த காலத்தில் தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம், ஈரோடு சென்று, பெரியார் இல்லத்தில் தங்கி, பயிற்சி பெற்று வருவார்கள் என்று கேள்விபட்டு இருக்கின்றேன்... உங்களை பார்க்கும்போதெல்லாம், எனக்கு பெரியார் நினைவே வருகிறது... பெரியார் போலவே உங்கள் சுறு சுறுப்பும் பேச்சும் என்னை கவர்கிறது" என்று தலைவர் வைகோ அவர்களை பாராட்டி உள்ளார்....

திரு.பாண்டே அவைத்தலைவர் பொறுப்பு வகிக்கும் போதெல்லாம், தலைவர் பேசத் தொடங்கினால் பேச்சை முடியுங்கள் என்று கூறவே மாட்டார்... இன்னும் பேசுங்கள்... பேசுங்கள் என்று உற்சாகப்படுத்துவார்....

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று அண்ணா அவர்கள் சொல்லிய கருத்தை உணர்ந்த திரு.திகம்பர்னாத் பாண்டே அவர்களுக்கு நன்றி....

(செய்தி சேகரிப்பு : அம்மாபேட்டை கருணாகரன், நாடாளுமன்றத்தில் வைகோ புத்தகத்திலிருந்து...)

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment