Tuesday, May 5, 2015

தமிழ் நாட்டிலே எப்போது கதைகள் வந்தது?

1822 ஆம் ஆண்டு சென்னை கல்வி சங்கம் வீரமாமுனிவருடைய பரமார்த்த குருவும் சீடர்களும் என்ற கதைகளை முதன்முதலாக புத்தகமாக அச்சிட்டது..அதன் பின் 4 ஆண்டுகள் கழித்து சோம சர்ம எழுதிய பஞ்ச தந்திர கதைகளை வில்லையம்பக்கம் தாண்டவராய முதலியார் போன்றோர் நூலாக எழுதி வெளியிட்டார்கள்...பின்பு
1853-ல் ஈசாப் நீதி கதைகள்...
1856-ல் மதனகாமராஜன் கதைகள்...
1858-ல் மயில் ராவணன் கதைகள்...
1869-ல் 32 பதுமை கதைகள் ....
1886-ல் திராவிட பூர்வ கால கதைகள் ...இடையில்

1840,1850,1860 களில் மரியாதை ராமன், தெனாலிராமன் கதைகள் தெலுங்கில் வர உதய தாரகை பத்திரிக்கையில் சதாசிவம் பிள்ளை அவர்கள் தமிழில் பதிப்பித்தார்கள்...
1892-ல் சாமினாத ஐயரின் விவேக சிந்தாமணி பத்திரிக்கையில் மாதவய்யா அவர்களும் டி.எஸ்.ராஜம் அவர்களும் கதைகளை எழுத தொடங்கினார்கள்...
1910-ல் இந்து பத்திரிக்கையில் மாதவய்யா வாரம் ஒரு கதை எழுதினார்...

1912-ல் குஷிகர் குட்டி கதைகள் இந்துவில் வந்தது
1920-ல் கல்கி அவர்கள் விமலா என்ற நாவலை எழுதினர்
1923-1941 வரை கல்கி அவர்கள் நவசக்தி, விமோசனம், ஆனந்த விகடனில் கதைகளை எழுதி பின் 1941-ல் கல்கியை படைத்தார்...
(தொடரும்)

வரலாறு மறந்த தலைமுறைக்காக தன் பேச்சால் வரலாற்றை ஞாபக படுத்திய தமிழின முதல்வர் வைகோ ...
(கருத்து சேகரிப்பு : அம்மாபேட்டை கருணாகரன் அவர்கள் முகநூலில் இருந்து,17-2-2007ல் வைகோ அவர்கள், திரு.கே.எஸ்.ஆர். அவர்களின் கதை சொல்லி இலக்கிய இதழை வெளியிட்டு உரையாற்றியதில் ஒரு பகுதி)

மதிமுக இணையதள அணி  - ஓமன்

No comments:

Post a Comment