Tuesday, May 5, 2015

விடுதலை புலிகளுக்கு 39 ஆவது பிறந்த நாள் வாழ்த்து!

தமிழீழ விடுதலைப் புலிகள் (Liberation Tigers of Tamil Eelam, LTTE) சுருக்கமாக விடுதலைப் புலிகள் என்பது, இலங்கையில் தமிழருக்கு ஏற்பட்ட இனவேற்றுமைகளுக்கு எதிராக இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிப் போராடிய போராட்ட அமைப்பு ஆகும். இது இலங்கையில் தமிழீழம் என்ற பெயரில் தமிழருக்கான தாயகத்தை அமைக்கும் உறுதியுடன் 1976 களில் இருந்து 2009 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து ஆயுதமேந்தி போராடியது. 2009 மே மாதம் போருக்கு பின்னர், தமிழர்களாக அமைதி வழியில் இன்று வரை போராடி வருகின்றனர். விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆவார். அவர் தமிழீழ தேசிய தலைவர் ஆவார். 


விடுதலைப் புலிகள் அமைப்பு மே 5, 1976 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.  இது இந்த நல்ல நாளில் 39 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறது. தமிழரின் தாயகமான தமிழீழம் கிடைக்கும் வரை போராடுவோம்.

"புலிகளின் தாகம், தமிழீழ தாயகம்"

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment