Sunday, May 3, 2015

மதிமுக தொண்டர்படை துணை அமைப்பாளர் தாயகம் கிருஷ்ணமூர்த்தி இல்ல மண விழா மல்லை சத்யா பங்கேற்று வாழ்த்து!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக திருவள்ளூர் மாவட்ட தொண்டர் படை துணை அமைப்பாளர் அண்ணன் தாயகம் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மகன் சதீஸ்குமார் அவர்களின் திருமணம் அம்பத்தூர் B.ஸ்.V.மஹாலில் நடைபெற்றது.

கழகத் துணைப் பொதுச்செயலாளர் அண்ணன் மல்லை சத்யா அவர்கள் முன்னிலையில் சுயமரியாதைத் திருமணமாக நடைபெற்றது.

"இந்த இயக்கத்திற்கு வந்த பின்பு கோடீஸ்வர்ர்கள் எல்லாம் இலட்சாதிபதி ஆகிவிட்டனர்.தம்பி சதீஷ் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தன்னலம் கருதாது உழைப்பவர்.ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழுங்கள்.காதல் திருமணமாக சுயமரியாதைத் திருமணமாக நடைபெற்று இருக்கின்றது." என்று மணமக்களை வாழ்த்திப் பேசினார்.

இந்த நிகழ்வில் திராவிடத் தென்றல் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன்,கழகத்தின் வானம்பாடி அந்தரிதாஸ்,நெமிலிச்சேரி பாபு,வெற்றிச்செல்வம்,பூவை து.கந்தன், தாமோதரன், இரா.அருணாசலம், தாமோதரன், ஆட்டோராஜ் உள்ளிட்ட திருவள்ளூர் மாவட்டக் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

(செய்தி சேகரிப்பு: அம்மாபேட்டை கருணாகரன் முகநூல்)


மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment