Wednesday, May 6, 2015

வழக்கறிஞர் வி.பி.தங்கம் மகள் வேல்விழி க்கு வைகோ வாழ்த்து!

மதிமுகவின் 22 ஆம் ஆண்டுவிழாவில் கலந்துகொண்ட வடசென்னை மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் வி.பி.தங்கம் அவர்களின் மகள் வேல்விழி 1330 திருக்குறளையும் ஒப்புவித்து தமிழக அரசிடமிருந்து 10000 ரொக்கத் தொகையும் விருதும் வாங்கி உள்ளார், அதை தலைவர் வைகோ அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். மிகச்சிறந்த திறமை இருக்கிறது. நல்லமுறையில் வெற்றி பெற வாழ்த்துகள் என குழந்தையிடம் தலைவர் கூறினார்...

ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் வி.பி.தங்கம் அவர்களின் மகள் வேல்விழி-க்கு பாராட்டுக்களை தெரிவிப்பதோடு, மேலும் பல சாதனைகளை படைக்க நற்ச்சிந்தனை மற்றும் பேரறிவை பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.

(செய்தி, படம் சேகரிப்பு:அம்மாபேட்டை கருணாகரன் முகநூல்)

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment