Wednesday, May 6, 2015

நாளை சிஐடி காலணி நியூட்ரினோ ஆலோசனைக்கூட்டத்தில் வைகோ!

தோழர்களே... 

நியோட்ரினோ எதிர்ப்பு சம்பந்தமாக நாளை மாலை 6 மணிக்கு சிஐடி காலணியில் உள்ள கவிக்கோ அரங்கத்தில் ஓர் ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளது. நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கத்தினரும், ஆதரவாளர்களும் கலந்து கொள்கிறார்கள். தலைவர் வைகோ அவர்களும் கலந்துகொள்கிறார்கள். நம் கழக தோழர்கள் பெருமளவில் கலந்து கொள்ளும்படி கேட்டு கொண்டிருக்கிறார்கள் என்பதை அண்ணன் ஆவடி அந்தரிதாஸ் அவர்கள் திருப்பூரில் நடைபெற்ற கழக 22 ஆவது உதயதின நிகழ்வு மூலம் தெரிவித்திருக்கிறார்கள்...

எனவே கழகத்தின் கண்மணிகள், முக்கிய நிர்வாகிகள், மற்றும் ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டு ஆதரவு தருமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

மதிமுக இணையதள அணி நண்பர்களும் வாய்ப்பு இருந்தால் தவறாமல் கலந்துகொள்ளும்படி ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் அன்போடு கேட்டுகொள்ளபடுகிறார்கள்.

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment