Tuesday, May 12, 2015

இயற்கையோடு இளைப்பாறிய தலைவர் வைகோ !

ஆறுகள், நீர் நிலைகள், குளம், குட்டைகள், வாய்க்கால்-வரப்புகள், செடி-கொடிகள், மரங்கள் என்று மரகத கம்பளம் விரித்தாற்போல் இயற்கை வளத்திற்கு மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் குறைவில்லை என்றே சொல்லலாம். தலைவர் அவர்களின் பரபரப்பான பயணத்தில் இயற்கையோடு இயைந்து இயற்கையை கொஞ்சும் தலைவரின் அழகை பார்க்க, காண கண் கோடி வேண்டும் அல்லவா! ஆம் நடந்தது. 

நாகை மாவட்டத்தில் மீத்தேன் எதிர்ப்பு பிரசார பயணத்தில் குத்தாலம் ஒன்றியம் கற்கத்தி, நச்சினார்குடி என்ற கிராமங்களுக்கு இடையில் ஆற்றின் ஓரம், பச்சை பசேல் என்ற பசுமைகளின் நடுவில் கயிற்றால் கட்டப்பட்ட மாட்டின் அருகில் மெல்ல சென்று இயற்கையோடு கொஞ்சும் தலைவரின் அழகை பாரீர். கத்திரிமூலை, பழையகூடலூர் என்ற கிராமங்களுக்கு இடையில் அமைந்துள்ள வீர சோழன் ஆற்றின் பாலத்தில் அமர்ந்து குளிர்ந்த காற்றை சுவாசிக்கும் அழகையும் பாரீர். 

ஏசி அறைக்குள் தன் வாழ்நாள் முழுவதையும் கழிக்கும் அரசியல் தலைவர்களுக்கு மத்தியில், மக்களோடு மக்களாக, இயற்கையோடு இளைப்பாறும் தலைவரை காண முடியுமா? ஆம் அவர்தான் இயற்கை வளங்களின் பாதுகாவலன் வைகோ !

(செய்தி சேகரிப்பு: ஆசைத்தம்பி முக நூலிலிருந்து)

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment