Monday, August 31, 2015

குவைத் மதிமுக வைகோ பாசறை அமைப்பாளரை போல மகனின் பொது சேவை!

மதிமுக வைகோ பாசறை குவைத்தில் இயங்கி வருகிறது. இதன் அமைபாளராக கழகத்தின் தொடக்க காலத்திலிருந்தே ஈரெழுத்தின் சொல்லுக்காக கட்டுப்பட்டு கழகத்தில் ஓயாமல் இயங்கிக்கொண்டிருக்கும் அன்பிற்குரிய அண்ணன், பின்னலூர் மணிகண்டணன் அவர்களின் மகன் பிரபா ( எ)  ம.தினகரன் அவர்கள், வடலூர் ஜேயின் மேரி மெட்ரிக்குலேசன் உயர் நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த முக்கியமான வகுப்பின் படிப்பிற்கு இடையிலும், அந்த பள்ளி மாணவர்கள், புற்றுநோய் ஒழிப்பு பிரச்சாரம் மேற்கொண்டு அதன் மூலம் நிதி வசூல் செய்தனர். 

இதில் அதிகமாக நிதி வசூலித்து முதலிடம் பிடித்தது, பின்னலூர் மணிகண்டணன் அவர்களின் மகன் பிரபா (எ)  ம.தினகரன் அவர்கள். எனவே பிரபா (எ)  ம.தினகரனை பாராட்டி பள்ளியில் பதக்கமும் சான்றிதளும் வழங்கி கவுரவித்தார்கள். சிறு வயதிலே தலைவர் வைகோ அவர்களின் பாசத்தை பெற்று, தலைவரின் செயல்களை பார்த்து வளரும் பிள்ளை அல்லவா, அதனால் சமூக சேவை என்பது தனது ரத்தத்தில் பாய்ச்சப்பட்டிருக்கிறது.

மேலும், அன்பு தம்பி பிரபா (எ)  ம.தினகரன், தான் வாங்கிய பதக்கத்தையும் சான்றிதளையும், வடலூர் அரிமா சங்கத்தின் தலைவர் ஞானசேகரன் அவர்களிடம் காண்பித்தார். அவர் பாராட்டியும், வாழ்த்தியும் ஊக்கப்படுத்தினார்.

தகப்பனாரை போலவே மகனும் சிறு வயதிலே பொது சேவையில் மிகுந்த ஈடுபாட்டோடு செயல்படுவது அனைவரையும் மெய் சிலிர்க்க வைக்கிறது. எனவே அன்பு தம்பி பிரபா ( எ)  ம.தினகரன் அவர்களுக்கு ஓமன் மதிமுக இணையதள அணியின் பாராட்டுதலை தெரிவிப்பதோடு, மேலும் பல பொது நலன்களுக்கான சேவைகளை செய்து தமிழக மக்களுக்கு பயன்படுமாறும் அன்போடு வாழ்த்துகிறோம்.

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

அமெரிக்க நிலைப்பாடை எதிர்த்து மனு கொடுப்பு, மதிமுகவின் சசிகுமார் பங்கேற்பு!

இலங்கையில் நடந்த இனப்படுகொலையில், மனித உரிமை மீறல் பற்றின விசாரணையை இலங்கையே விசாரிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் நிலைபாட்டை 100 மணிநேரத்தில் திரும்ப பெற வேண்டியும் இலங்கையில் சர்வதேச சுதந்திர இனப்படுகொலை விசாரணையை கொண்டு வரவேண்டியும் பல தோழமை இயக்கங்கள் மற்றும் அமைப்புகளால் இன்று சென்னை அமெரிக்க தூதரகத்தில் அமெரிகாவின் நிலைப்பாடுக்கு எதிர்பு தெரிவித்து மனு மற்றும் எச்சரிக்கை கடிதம் கொடுக்கப்பட்டது.

இதில் மதிமுகவின், மறுமலர்ச்சி மாணவர் மன்றம் அமைப்பாளர் சசிகுமார், இளைய தலைமுறை கட்சியின், இனியன் ஜாண், மாறன், தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு மாணவர் இயக்கம், பாலச்சந்திரன் மாணவர் இயக்கம், மறுமலர்ச்சி நாம் தமிழர் இயக்கம் சீலன் பிரபாகரன் ஆகியவற்றின் அமைப்பாளர்கள் கலந்துகொண்டு மனுவை கையளித்தனர்.

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

தமிழின கொலையாளிக்கு உதவும் அமெரிக்காவை கண்டித்து அதன் தூதரகம் முற்றுகை!

ஈழத்தமிழ் இனக் கொலையாளியைத் தீர்ப்பாளியாக்க முயலும் அமெரிக்க அரசின் துரோகத்தைக் கண்டித்து நாளை காலை 10 மணிக்கு (செப்டம்பர் 1) சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் முற்றுகை அறப்போர் நடைபெற இருக்கிறது. தலைவர் வைகோ தலைமை தாங்குகுறார். அதற்கான இடத்தை இன்று மாலை தலைவர் வைகோ அவர்கள் பார்வையிட்டார். அப்போது வட சென்னை மாவட்ட மதிமுக செயலாளர் ஜீவன் உடனிருந்தார்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

வைகோ சமர்பித்த சாட்சியங்களுக்கு அவகாசம் கேட்டது அரசு, வழக்கு ஒத்திவைப்பு!

மது ஒழிப்பு போராளி காந்தியவாதி சசிபெருமாள் மரணம் குறித்து வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தன்னையும் இணைத்துக்கொண்ட வைகோ ஏற்கனவே அவரின் இறப்பு குறித்து ஆராய சசிபெருமாள் இறந்த பகுதியான குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்த உண்ணாமலைகடைக்கு சசி பெருமாள் இறந்த அந்த அலைபேசி கோபுரம் இருக்கும் இடத்திற்கு 28 ஆகஸ்டு காலை சென்று அங்குள்ள பொதுமக்களிடமும் கலந்துகொண்ட தலைவர்கள், அப்பகுதி பஞ்சாயத்து நிர்வாகிகளிடம் நேரடியாக வழக்கு விசாரணக்கு தேவையான தகவல் சேகரித்திருந்தார். 

இன்றுள்ள வழக்கு விசாரணைக்கு தலைவர் உயர்நீதிமன்றத்தில், சசிபெருமாள் வழக்கிற்காக மதியம் வந்தார். வரும்போதே பத்திரிகையாளர்கள் சூழ்ந்துகொண்டு நில மசோதா தொடர்பாக கேட்டனர். அப்போது தலைவர் வைகோ அவர்கள் மோடிக்கு நன்றி தெரிவிக்கிறேன். அவருக்கு இன்று கடிதம் எழுதி இருக்கிறேன் என தெரிவித்து நீதிமன்றத்திற்குள் சென்றார். 

மதியம் 2.15 மணி அளவில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அபோது தலைவர் வைகோ அவர்கள் மரணம் குறித்த தெளிவான சாட்சியங்களை எடுத்து வைத்தார். தலைவர் சமர்பித்த சாட்சிகளுக்கு பதில் தர இரு வார காலம் அவகாசம் வேண்டுமென அரசு தரப்பு கேட்டதற்கிணங்க வழக்கு 25-9-15 அன்று தள்ளி வைக்கபடுகிறது.

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

மயிலாடுதுறை நகரக் கழகப் பொறுப்பாளர் மார்க்கெட் கணேசன் - வைகோ வாழ்த்து!

நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகரக் கழகப் பொறுப்பாளர் அண்ணன் மார்க்கெட் கணேசன் அவர்கள் நேற்று திருக்கடையூர் வந்த தலைவர் அவர்களிடம் புதிய மகிழுந்து வாங்கியதைத் தொடர்ந்து காண்பித்து வாழ்த்து பெற்றார்.

அப்பொழுது தலைவர் அவரது ஓட்டுநர் பாஸ்கரிடம் 80 கி.மீ வேகத்திற்கு மேல் செல்லக் கூடாது என்று அன்போடு கட்டளையிட்டு கேட்டுக்கொண்டார். நாகை மாவட்ட மதிமுக செயலாளர் AS மோகன் அவர்கள் உடனிருந்தார்கள்.

செய்தி: சகோதரர் தீபன் முகநூல்

மதிமுக இணையதள அணி - ஓமன்

Sunday, August 30, 2015

தலைவர் வைகோவை சீர்காழியில் வரவேற்றனர் மார்கோனி குடும்பத்தினர்!

சீர்காழியில் தலைவருக்கு வரவேற்பு அளித்தார் மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஆற்றல்மிகு செயல்வீரன் திரு மார்கோனி அவர்கள். அவருடன் அவரது குடும்பத்தினர்களும் சேர்ந்தே வரவேற்றனர்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

திரு நின்றவூர் நகர செயலாளர் ஆட்டோராஜ் அவர்கள் வைகோ அவர்களை சந்தித்தார்!

இன்று திரு நின்றவூர் நகர செயலாளர், சிங்களவனை வேட்டையாடும் புலி, ராஜபக்சேவை ஓடவிட்ட புலி, அண்ணன் ஆட்டோராஜ் அவர்கள், தனது குடும்பத்தினருடன் தமிழின முதல்வர் வைகோ அவர்களை வைகோ அவர்களின் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

ஆட்டோராஜ் தம்பி மணி குழந்தைக்கு ஆதித்த கரிகாலன் பெயர் சூட்டினார் வைகோ!

அண்ணன் ஆட்டோராஜ் அவர்களின் தம்பி மணி அவர்களுக்கு பிறந்த குழந்தைக்கு ஆதித்த கரிகாலன் என்ற பெயர் சூட்டினார்...தனக்கு மிகவும் பிடித்த பெயர் இது என்றும், யாருக்காவது சூட்ட வேண்டும் என நினைத்து கொண்டிருந்தேன் எனவும் அருமையான தமிழ் பெயர் எனவும் மகிழ்ந்து சொல்லி தம்பதியினருக்கும் வாழ்த்து சொன்னார்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

காவல் தெய்வத்தின் முன்னிலையில் ஓய்வெடுத்தார் வைகோ!

கிருஷ்ணசாமி வாண்டையார் அவர்கள் இல்ல நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, சென்னை திரும்பும் வழியில் கடலூர் - புதுச்சேரி சாலையில், வயல்வெளிகள் சூழ்ந்திருக்கக்கூடிய அய்யனார்கோவில் வேப்பமரத்தின் நிழலில் சிறிது நேரம் தலைவர் வைகோ அவர்கள் ஓய்வு எடுத்தார்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

பெரம்பூர் பகுதி செயலாளர் அண்ணன் பாஸ்கர் இல்ல திருமணத்தில் வைகோ!

வடசென்னை மாவட்டம் மதிமுக பெரம்பூர் பகுதி செயலாளர் அண்ணன் பாஸ்கர் அவர்கள் இல்ல திருமண நிகழ்ச்சியில் தமிழின முதல்வர், எங்கள் மாமேதை வைகோ வைகோ அவர்கள் கலந்துகொண்டார்கள். 

அங்கு பலரை சந்தித்து நலம் விசாரித்தாலும் கழகத்தின் மூத்த முன்னோடி அண்ணன் முன்னேற்றம் அவர்களை அருகிலே சென்று நலம் விசாரித்தார் தமிழின முதல்வர் வைகோ

தலைவர் மணமக்களுக்கு மாலை கொடுத்து, புத்தகத்தை கொடுத்து வாழ்த்துரை நிகழ்த்தினார். அப்போது பேசிய தலைவர் வைகோ அவர்கள், நாங்கள் தூக்கி நிறுத்துகிற நேர்மைதான் எங்களை வெற்றி பெற வைக்கும். பஞ்ச பாண்டவர்களின் வெற்றிக்கு காரணம் கண்ணன். எங்களின் கண்ணன்.,நேர்மை..கொள்கை என பேசினார் தமிழின முதல்வர் வைகோ.

இந்த திருமணத்தில் கழக முன்னோடிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.


மதிமுக இணையதள அணி - ஓமன்

















தமிழீழ விடுதலை புலிகளை 30 நாடுகள் சேர்ந்து அழித்தது ஏன்?

தமிழீழ விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது, விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள், அவர்கள் எங்கிருந்து உருவாகினார்கள், அவர்களின் போராட்ட வரலாறு என்ன, அவர்கள் எதற்காகப் போராடினார்கள்? என்று தெரிந்தும் சில அடிவருடிகள் சந்தர்ப்பத்திற்கேற்ப பச்சோந்திகளாக மாறி..... “விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கம்” என சிங்களவர்களுடன் சேர்ந்து அறிக்கைகள் விட்டுக் கொண்டு இருக்கிறார்கள். சில போராளிகள், சில தளபதிகள் சிங்கள அரசப் படைகளை எதிர்த்து கண்ணுக்கு எட்டும் தூரம் வரை நின்று போராடியிருக்கிறார்கள். சிங்களப்படைகள் நெருங்க நெருங்க துப்பாக்கி ரவைகள் முடியும் வரை நின்று போராடியிருக்கிறார்கள். அவர்கள்தான் அங்கே உடனடியாக கைது செய்யப்பட்டு அந்தந்த இடங்களில் வைத்தே உடனடியாக பழி தீர்க்கப்பட்டவர்கள் ஆவார்கள்..!

உலகில் எந்த யுத்த களத்திலும் அதியுச்ச போர் நடந்து கொண்டிருக்கும் ஒரு குறுகலான சிறிய இடத்தில் வைத்து அந்தப் போராட்ட வேளையிலே யுத்த கோரத்தாண்டவங்களை நேரடியாக எவரும் ஒலிப்பரப்பு செய்து கொண்டிருக்க மாட்டார்கள்.

ஆனால், விடுதலைப் புலிகளோ… கடும் யுத்தம் நடந்து கொண்டிருக்கையில், ஒரு சிறிய சரக்கு வாகனத்தில் வைத்து "தவபாலன்" என்ற போராளி தான் சுடப்பட்டு இறக்கும் வரை “புலிகளின் குரலை” இறுதி வரை ஒலிக்கச் செய்து கொண்டிருந்தார்.அவ்வாறு சில போராளிகளும் பட ஒளிப்பதிவுகள் செய்தமையும், வீடியோக்களை பதிவுசெய்து வெளிநாடுகளுக்கும் அனுப்பியதாலும்,மக்களின் பேரவலங்கள் இன்று உலகின் பார்வைக்கு வந்தது! விடுதலைப் புலிகளை “தீவிரவாதிகள்” என்று விமர்சித்து கொச்சைப்படுத்துபவர்களே…!

உங்கள் சுயமூளையுடன் சற்று சிந்தியுங்கள்..! உலகம் தோன்றிய காலம் முதல் இன்று வரையும் உலகில் எந்த விடுதலை அமைப்புக்களும் விடுதலைப் புலிகள் போல் வளர்ந்ததும் இல்லை!, வாழ்ந்ததும் இல்லை!இந்த இருபத்தியோராம் நூற்றாண்டுவரை உலகில் எந்த விடுதலை அமைப்பு, விடுதலைப் புலிகள் போல் போராடினார்கள்?

* உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பும் தனக்கென தனியாக இராணுவச் சீருடைகளை அணிந்ததில்லை!

*உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பினரும் தங்களது படை நடவடிக்கைகளுக்கு பெயர் சூட்டி அழைத்ததில்லை!

* உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பினரும் போரில் இறந்த தங்கள் வீரர்களுக்கு தனியாக இடம் ஒதுக்கி கல்லறைகள் (துயிலும் இல்லங்கள்) கட்டியதில்லை!

* உலகில் எந்தவொரு விடுதலை அமைப்பும் நாப்பதாயிரத்திற்கு மேற்பட்ட வீரர்களை இழந்ததில்லை!

*உலகில் எந்தவொரு விடுதலை அமைப்பினரையும் உலக அரங்கில் பேச்சுவார்த்தைகளுக்கு சர்வதேச நாடுகள் அழைத்ததில்லை !

* உலகில் எந்தவொரு விடுதலை அமைப்பினருக்கும் ஏராளமான சமூக, போராட்ட, செய்தி இணையத்தளங்கள் இருந்ததில்லை!

* முகநூல்களிலும் வேறு சமூக, செய்தி இணையத்தளங்களிலும் தலைவர் பிரபாகரன் பற்றியும், விடுதலைப் புலிகள் போராட்டம் பற்றியும் முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வந்தது போல், வேறு எந்த விடுதலை அமைப்பினர் பற்றியும் பரவலாக செய்திகள் வந்ததில்லை!

* விடுதலைப் புலிகளுக்கு உலகினில் வாழும் அனைத்து தமிழர்களிடமும் இருந்து கிடைக்கப் பெற்ற பெரும் செல்வாக்கு போல், உலகினில் வாழும் வேறு எந்த விடுதலை அமைப்புக்கும் கிடைத்ததில்லை!

* விடுதலைப் புலிகள் தீவிரவாத இயக்கம் என்றால், எப்படி முப்படைகளையும் கொண்ட மரபுவழி இராணுவமாக வளர முடிந்தது? அது எப்படி சாத்தியாமானது?

* அவர்கள் தீவிரவாதிகள் என்றால் எப்படி மக்களின் பெரும்பலம் அவர்களுக்குக் கிடைத்தது?

பிறகு ஏன் விடுதலைப் புலிகளை முப்பதிற்கும் மேற்பட்ட நாடுகள் சேர்ந்து அழிக்க வந்தன…?

அந்த சிறிய தேசத்தில் இருந்து அவர்கள் வளர்ந்த அசுர வளர்ச்சிதான் காரணம்! அவர்களின் வளர்ச்சியை ஜீரணித்துக் கொள்ள முடியாத இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் அவர்களையும், அவர்களின் போராட்டத்தையும் அழித்து விட முடிவு செய்து, போர் தொடுத்து மக்களை துடிக்கத் துடிக்க கொன்று குவித்து, போராளிகளை கொன்றும், சில போராளிகளைக் கைது செய்தும் சகல இடங்களையும் கைப்பற்றினார்கள். ஆனால், அவர்களுக்குக் கிடைத்ததோ விடுதலைப் புலிகளின் சில ஆயுதங்கள் மட்டுமே! அவ்வாறெனில் சில நூற்றுக்கணக்கானதளபதிகளும், பல ஆயிரக்கணக்கான போராளிகளும் எங்கே போனார்கள்? அவர்கள்தான் அங்கிருந்த தமிழ் பேசும் மக்கள் என்பதை இன்றுவரையும் விடுதலைப் புலிகளை “தீவிரவாதிகள்” என்று சொல்லும் பலர் ஏற்றுக்கொள்வதில்லை!

இன்று வரையும் சில சர்வதேச நாடுகளாலும், சில விசக்கிருமிகளாலும் “தீவிரவாதி” என்றழைக்கப்படும் தலைவர் பிரபாகரன் அவர்கள் ஒரு தனி மனிதனாக ஒரு விடுதலைப் படையை உருவாக்கி, மக்களுக்கான பல நன்மைகளும், பயன் பெறக்கூடியதுமான பல உள்கட்டமைப்புக்களை உருவாக்கினார்.

அந்த உள்கட்டமைப்புக்கள் பின்வருமாறு:-
* தமிழீழ காவல்துறை, 
      *குற்றத் தடுப்புக் காவல் துறை, 
      *குற்றப் புலனாய்வுப் பிரிவு.
* தமிழீழ வைப்பகம்.
* தமிழர் புனர்வாழ்வுக் கழகம்.
* தமிழர் புனர்வாழ்வு அபிவிருத்திக் கழகம்.
* சமூக பொருளாதார அபிவிருத்தி வங்கி.
* கிராமிய அபிவிருத்தி வங்கி.
* அனைத்துலகச் செயலகம்.
* நந்தவனம் 
 (வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவோர்களுக்கான தொடர்பாடல்        சேவை மையம்)
* சுங்க வரித்துறை.
* தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம்.
* அரசறிவியற் கல்லூரி.
* வன வளத்துறை.
* தமிழீழ நிதித்துறை.
* தமிழீழ நீதித்துறை, நீதிமன்றுகள்.
* கலை பண்பாட்டுக்கழகம்.
* மருத்துவப் பிரிவு.
* திலீபன் சிறப்பு மருத்துவமனை.
* பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை.
* மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவு.
* சுகாதாரப் பிரிவு.
* ஆவணப்படுத்தல், பதிப்புத்துறை, வெளியிட்டுப் பிரிவு.
* போக்குவரத்து கண்காணிப்புப் பிரிவு.
* நிர்வாக சேவை.
* அனைத்துலக தொலைத்தொடர்பு செயலகம்.
* மீன்பிடி வளத்துறை.
* விழிப்புக்குழு (கிராமங்களுக்கான இரவுப் பாதுகாப்பு)
* தொழில் நுட்பக் கல்லூரி.
* சூழல் நல்லாட்சி ஆணையம்.
* தமிழீழ பொறியியல் தொழில்நுட்ப வளர்ச்சித்துறை.
* தமிழீழ விளையாட்டுத்துறை.
* தமிழீழ காலநிலை அறிவுறுத்தல் வாரியம்.
* தமிழீழ போக்குவரவுக் கழகம்.
* மனிதவள செயலகம் (தமிழீழ கிராம சேவகர் பிரிவு).
* வளங்கள் பகுதி.
* மக்கள் தொடர்பகம் (மக்கள் குறை நிறைகளை தலைவரிடம் கொண்டு செல்லும் பிரிவு)
* விலங்கியல் பண்ணைகள்.
* விவசாயத் திணைக்களம்.
* தமிழ்மொழி காப்பகம்.
* தமிழீழ சட்டக்கல்லூரி.
* தமிழீழ கல்விக் கழகம்.
* தமிழீழ கல்வி மேம்பாட்டுப் பேரவை.
* காந்தரூபன் அறிவுச்சோலை (ஆதரவற்ற ஆண் குழந்தைகளுக்கானது).
* செஞ்சோலை (ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கானது).
* செந்தளிர் (ஐந்து வயதிற்குட்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கானது).
* வெற்றிமனை (வலுவிழந்தோருக்கானது)
* அன்பு முதியோர் பேணலகம்.
* இனிய வாழ்வு இல்லம். (காது கேளாத, வாய் பேசாத, பார்வை இல்லாத ஊனமுற்ற சிறுவர் சிறுமிகளுக்கானது)
* சந்தோசம் உளவள மையம் (மனநோயாளிகளுக்கானது).
* நவம் அறிவுக்கூடம் (பார்வை இழந்த போராளிகளுக்கானது)
* மயூரி இல்லம் (இடுப்பின் கீழ் வலுவிழந்த பெண் போராளிகளுக்கானது)
* சீர்திருத்தப் பள்ளி.
* முரளி முன்பள்ளி 
   (ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆரம்பப் பள்ளி).
* புனிதபூமி மகளிர் காப்புத்திட்டம்
* உதயதாரகை (விதவைகளுக்கானது).
* பெண்கள் மறுவாழ்வு அபிவிருத்தி மையம்.
* பசுமை வேளாண் சேவை (விவசாயிகளுக்கானது).
* எழுகை தையல் பயிற்சி மையம்.
* மாணவர் அமைப்பு.
* பொத்தகசாலை (அறிவு அமுது).
* ஒளிப்பட பதிவுப் பிரிவு. திரைப்பட வெளியிட்டுப் பிரிவு.
* நிதர்சனம் (திரைப்படத் தயாரிப்பு).
* தர்மேந்திரா கலையகம் (திரைப்பட கலைகள் சம்மந்தமானது).
* விடுதலைப்புலிகள் செய்தி இதழ்.
* சுதந்திரப் பறவைகள் (பெண்கள் செய்தி இதழ்).
* ஈழநாதம் (தினச்செய்தி பத்திரிக்கை).
* வெளிச்சம் (மாத சஞ்சிகை).
* நாற்று (மாத சஞ்சிகை).
* பொற்காலம் வண்ணக் கலையகம்.
* அருச்சுனா புகைப்படக் கலையகம்.
* ஒளிநிலா திரையரங்கு.
* புலிகளின் குரல் வானொலி.
* தமிழீழ வானொலி.
* தமிழீழ தேசியத் தொலைக்காட்சி.
* பல சமூக செய்தி இணையத் தளங்கள்.
* தமிழீழ இசைக்குழு.
* காலணி (பாதணி உற்பத்தி மையம்)
* சேரன் உற்பத்திப் பிரிவு.
* சேரன் வாணிபம்.
* சேரன் சுவையகம்.
* சேரன் வெதுப்பகம்.
* சேரன் அரைக்கும் ஆலை (அரிசி உற்பத்தி).
* பாண்டியன் உற்பத்திப் பிரிவு.
* பாண்டியன் சுவையூற்று.
* பாண்டியன் பல்பொருள் வாணிபம்.
* சோழன் தயாரிப்புகள்.
* பொன்னம்மான் உரைவகை வாணிபம்.
* தென்றல் இலத்திரனியலகம்.
* தமிழ்மதி நகை மாடம்.
* தமிழ்நிலா நகை மாடம்.
* தமிழரசி நகை மாடம்.
* அந்திவானம் பதிப்பகம்.
* இளந்தென்றல் குடிவகைப் பிரிவு.
* இளவேனில் எரிபொருள் நிலையம்.
* இளந்தென்றல் தங்ககம் (ளொட்கெ).
* 1௯ தங்ககம் (ளொட்கெ)
* மருதம் வாணிபம்.
* மருதம் புலால் விற்பனை நிலையம் (மாமிசம்).
* மரமடுவம் (காட்டுமரங்கள், விறகுகள் விற்பனைப் பகுதி).
* கேடில்ஸ் தும்புத் தொழிற்சாலை.
* மாவீரர் அரங்குகள்.
* மாவீரர் நினைவு விளையாட்டு அரங்குகள்.
* மாவீரர் நினைவு வீதிகள்.
* மாவீரர் நினைவு குடியிருப்புத்திட்டங்கள்.
* மாவீரர் போராளிகள் குடும்பநலன் காப்பகம்.
* மாவீரர் நினைவுப் பூங்காக்கள்.
* மாவீரர் நினைவுப் படிப்பகங்கள்.
* மாவீரர் நினைவு நூலகங்கள்.
* மாவீரர் நினைவு விலங்கியல் காப்பகம்.
* மாமனிதர் விருதுகள் (சமூக, பொதுத் தொண்டுகள் செய்வோருக்கானது)

இது தவிர இரணைமடு அறிவியல் நகரில் புதிதாக உருவாக்கப் பட்டுக் கொண்டிருந்த தமிழீழ பல்கலைக் கழகம் இறுதி யுத்தத்தினால் கைவிடப்பட்டுள்ளது. இன்னும் பெயர் தெரியாத நிறைய அமைப்புக்கள். உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பும் விடுதலைப் புலிகளைப் போல் தங்கள் தேசத்திற்கென “தேசிய மலர்”, “தேசிய மரம்”, “தேசியப் பறவை”, “தேசிய விலங்கு” போன்ற தேசியச் சின்னங்களை வைத்துக் கொண்டதில்லை. சிங்கள அரசாங்கமானது ஒவ்வொன்றுக்கும்தடைபோட்டு நசுக்கிப் பறிக்கப் பறிக்க… தலைவர் பிரபாகரன் அவர்கள் ஒவ்வொன்றையும் பாதுகாக்க பல அமைப்புக்களை உருவாக்கினார். அவைகள்தான் மேற்குறிப்பிட்டமக்களுக்கான உள்கட்டுமான அமைப்புக்கள். இவர்தான் உங்கள் பார்வையில் தீவிரவாதியா ?
மக்களுக்கான கட்டமைப்புக்கள்ஒருபுறமிருக்க, இராணுவக் கட்டமைப்புக்களைப் பாருங்கள்.

தரைப்படைகள்:-
* இம்ரான் பாண்டியன் படையணி.
* ஜெயந்தன் படையணி.
* சார்லஸ் அன்ரனி சிறப்புப் படையணி.
* கிட்டு பிரங்கிப் படையணி.
* குட்டிச்சிறி மோட்டார் படையணி.
* இராதா வான்காப்பு படையணி.
* சிறப்பு உந்துகணை செலுத்திப் படையணி.
* விக்டர் கவச எதிர்ப்புப் படையணி.
* சோதியா சிறப்புப் படையணி.
* மாலதி சிறப்புப் படையணி.
* அன்பரசி படையணி.
* ஈருடப் படையணி.
* குறி பார்த்துச் சுடும் படையணி.
* சிறுத்தைப் படையணி.
* எல்லைப்படை,
* துணைப்படை,
* பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவு.
* ஆயுதக்களஞ்சிய சேர்க்கைப் பிரிவு.
* பாதுகாவலர் பிரிவு.
* முறியடிப்புப் பிரிவு.
* காப்டன் முகிலன் நீண்ட தூர விசேட வேவு ரோந்து அணி.
* ஆழ ஊடுருவும் படையணி.
* உந்துருளிப் படையணி

கடற்படைகள்:-
* கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு.
* கடல் வேவு அணி.
* சார்லஸ் சிறப்பு அணி.
* அங்கயற்கண்ணி ஆழ்கடல் நீச்சல் அணி (பெண்கள்).
* சுலோஜன் ஆழ்கடல் நீரடி நீச்சல் அணி (ஆண்கள்).
* கடற்சிறுத்தை சிறப்பு அணி.
* சங்கர் படையணி.
* வசந்தன் படையணி.
* சேரன் படையணி.
* பாக்கியன் ஆழ்கடல் தாக்கும் படையணி.

* வான்படை.
* கரும்புலிகள்.
* புலனாய்வுத்துறை.
* வெளியகப் புலனாய்வுப் பிரிவு.
* உள்ளகப் புலனாய்வுப் பிரிவு.
* படையப் புலனாய்வுப் பிரிவு (Mஈ)
* வேவுப் பிரிவு.
* களமுனை முறியடிப்புப் பிரிவு.
* களமுனை மருத்துவப் பிரிவு.
* கணினிப் பிரிவு.
* பொறியியல் பிரிவு.
* விசேட வரைபடப் பிரிவு.
* அரசியல் துறை, பரப்புரைப் பிரிவு, கொள்கை முன்னெடுப்புப் பிரிவு.
* தமிழீழ படைத்துறைப் பள்ளி.
* ஆயுத உற்பத்திப் பிரிவு.
* மின்னணுவியல் சிறப்பு உதவிப் பிரிவு.
* மாவீரர் பணிமனை

இப்படியானதொரு இராணுவக் கட்டமைப்பை உலகில் எந்த விடுதலை இயக்கமும் கொண்டு வந்ததில்லை! ஆரம்பத்தில் உருவாகும்போது “விடுதலைப் புலிகள்” என்ற அமைப்பாகத்தான் இருந்தார்கள். காலங்களாகி வளர வளர மக்களின் பேராதரவினாலும், மக்களின் முழு பலத்தினாலும் “தேசிய இராணுவமாக” வளர்ந்து, ஒரு தேசத்தையே உருவாக்கினார்கள். ஆரம்ப காலங்களில் விடுதலைப் புலிகள் அமைப்பாக இருந்தாலும், இடைப்பட்ட காலங்களில் முப்படைகளையும் கொண்டு ஒவ்வொரு படையணிகளுக்கும் தனித்தனி சீருடையுடன் ஒரு தேசிய இராணுவமாக உலக நாடுகளின் இராணுவங்களுக்குஒப்பாக இருந்தார்கள்.
எல்லா நாடுகளிடமும் முப்படைகள் இருந்தது, விடுதலைப் புலிகளிடம் ஒரு படை அதிகமாகவே இருந்தது; அந்த வீரமிக்க படைதான் “கரும்புலிகள்”!

உலகில் எந்த நாடுகளிடமும் இல்லாத உயரிய ஆயுதமான, எந்தவிதமான ஆயுதங்களாலும் வெற்றி கொள்ளமுடியாத, எந்தவிதமான ஆயுதங்களோடும் ஒப்பிட முடியாத உயிராயுதமான “கரும்புலிகள்” விடுதலைப் புலிகளிடம் இருப்பது அவர்களுக்கு சிறப்பையும், அதிக பலத்தையும் கொடுத்திருந்தது. அந்தச் சின்னஞ்சிறிய தேசத்தில் இருந்த விடுதலைப் புலிகளின் படைகளுடன் மோத துணிச்சல் இல்லாத சிங்கள தேசம்தான், முப்பதிற்கு மேற்பட்ட உலக நாடுகளுடன் சேர்ந்து மோதி வெற்றி கண்டதென மார்தட்டிக் கொண்டு திரிகிறது! தமிழர்கள் கவலைப்பட வேண்டிய நேரம் இதுவல்ல…. ஒரு சின்னஞ்சிறிய தேசத்தில் எந்தவித உதவிகளும் இல்லாதிருந்த ஒரு மக்கள் படையுடன் முப்பதிற்கும் மேற்பட்ட உலக நாடுகள் மோதுகின்றன என்றால்… அங்கே தமிழனின் வீரம் எத்தகையது என்பதை ஒவ்வொரு தமிழனும் உணரவேண்டும். அங்கு தமிழனுக்குத்தான் வெற்றி கிடைத்துள்ளது !

இன்றைய இருபத்தியோராம் நூற்றாண்டில் உலக அரங்கில் தமிழனின் உண்மையான வீரம்தான் முன்னிலை வகிக்கிறது. உலக சரித்திரத்தில் தமிழனுக்கென்று ஒரு குணம், தமிழனுக்கென்று ஒரு வீரம் அழியாமல் இடம் பிடித்துள்ளது! இதை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது! இவ்வாறு தமிழர்களின் வீரத்தை உலக வரலாற்றில் பதிய வைத்த விடுதலைப் புலிகளா… தீவிரவாதிகள் ?

விடுதலைத் தீ என்பது அனைத்து தமிழ் பேசும் மக்கள் மனதிலும் எரிந்து கொண்டிருக்கிறது! எந்த, தமிழ் பேசும் மக்களின் மனதில் விடுதலைக்கான தீ எரிகிறதோ….. அவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள்தான் என்பதை சிங்கள அரசும், சர்வதேசமும் மறந்து விடக்கூடாது! விடுதலைத் தீ என்பது எளிதில் அணைந்து விடாது! யாரும் அணைக்கவும் முடியாது! அந்தத் தீ எதற்காக எரிய ஆரம்பித்ததோ அதை அடையும் வரை எரிந்து கொண்டே இருக்கும். அதுவரையும் விடுதலைப் புலிகளும் வளர்ந்து கொண்டே இருப்பார்கள் !

"தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்"

மதிமுக இணையதள அணி - ஓமன்

இராசபாளையம் மேற்கு ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம்!

விருதுநகர் மாவட்டம் இராசபாளையம் மேற்கு ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் 30/08/2015-ல் ஞாயிற்றுகிழமை காலை 11-மணிக்கு அவைத்தலைவர் சி.மலைக்கனி தலைமையில் நடைபெற்றது. 

இராசபாளையம் மேற்கு ஒன்றியத்தின் செயலாளர் சிங்கம் தலைவர் வைகோவின் போர்படை தளபதி திரு.ப.வேல்முருகன் அவர்கள் ஆவேசமாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கட்சியை வலுப்படுத்துமாறும், வைகோ தமிழகத்தின் முதல்வராக்குவோம் என உறுதி ஏற்போம் என முழங்கினார்.

பின்னர் க.விநாயகமூர்த்தி சிறப்புரையாற்றினார். நகரச்செயலாளர் வி.எஸ்.இராசா, கிழக்குஒன்றிய செயலாளர் ஆசிலாபுரம் பாண்டுரங்கன், பொதுக்குழுஉறுப்பினர் ஏ.இ.ஞானகுரு, மாவட்டமாணவரணி அமைப்பாளர் அ.மதியழகன், தொழிற் சங்க செயலாளர் காதர் மாமா, பேரூர்கழகச்செயலாளர்கள் ச.முருகேசன், சி.இராமகணேசன் மற்றும் கழக கண்மணிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதிமுக இனையதள அணி - ஓமன்