Sunday, August 23, 2015

திராவிட பாசறையில் பயிற்ச்சி பெறும் பிரபாகரனுக்கு பிறந்தநாள் வாழ்த்து!

உலக பூமிப்பந்தில் தாயகத்தை மீட்க போராடிக்கொண்டிருக்கிற தரைப்படை, வான்படை, கடற்படை மற்றும் அனைத்து கட்டமைப்புகளையும் உள்ளடக்கிய ஒரு நாட்டிற்கு தேவையான அனைத்து அமைப்புகளையும் கொண்ட ஐநாவால் விரைவிலே அங்கிகாரம் கிடைக்கப்பெற இருந்த ஒரே நாட்டை கட்டி எழுப்பிய உலகமெல்லாம் வாழும் மொத்த தமிழ் சொந்தங்களின் காவலன், தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் பெயரை தாங்கி நிற்கின்ற, திராவிட கொள்கைகளை தாங்கிப்பிடித்து தமிழக மக்களுக்காக போராடிவருபவர் முன்னிலையில் தனது துணை வாழ்வை ஏற்றுக்கொண்டு, மதிமுக பட்டிமன்றங்களை பட்டி தொட்டியெங்கும் கொண்டுசெல்ல முனைப்புடன் செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஆருயிர் அண்ணன் செந்திலதிபன் அவர்களின் மகன்தான் பிரபாகரன். அந்த திராவிடம் பெற்றெடுத்த குழந்தை அன்பு தம்பி பிரபாகரன் காஞ்சி மாவட்ட திராவிட இயக்க பட்டறையில் பயிற்ச்சி எடுத்து வருகிறார். அவருக்கு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment