Thursday, August 20, 2015

திராவிட இயக்க பயிற்சி பட்டறையில் கழகத்தின் அனைத்து அமைப்பாளர்கள் கலந்துகொள்ள வைகோ உத்தரவு!

காஞ்சி மாவட்டம், திருப்பெரும்புதூர், வல்லக்கோட்டை ஐஸ்வர்யா திருமண மண்டபத்தில் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்கள் நடைபெறும் திராவிட இயக்க பயிற்சிப் பட்டறை பயிலரங்கம் நடைபெறுகிறது. 

இப்பயிலரங்கில் கழக மாணவர் அணியின் மாநில துணைச் செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், மாவட்ட துணை அமைப்பாளர்கள் அவசியம் பங்கேற்க வேண்டும் என்று தலைவர் வைகோ அவர்கள் உத்திரவிட்டுள்ளதாக மதிமுக மாநில மாணவர் அணியின் செயலாளர் தி.மு.இராசேந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

எனவே கழக அனைத்து அமைப்பாளர்களும் தவறாது கலந்துகொண்டு திராவிட இயக்கத்தை பற்றிய தெளிந்த ஆற்றலை பெற்று சேவை செய்ய ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment