Saturday, August 22, 2015

NLC தொழிலாளர் கோரிக்கை நிறவேற்ற கோரி அனைத்துக்கட்சிகள் ஆர்ப்பாட்டம், கடலூர் மாவட்ட மதிமுக பங்கேற்பு!

இன்று 22.8.2015  காலை N L C நிரந்தர தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கடலூர் மாவட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் சார்பில் நெல்லிக்குப்பம் ரயில் நிலையத்தில் மாபெரும் ரயில் மறியல் போராட்டம் நடைப்பெற்றது. இந்த போராட்டத்தில் கடலூர் மதிமுக மாவட்ட செயலாளர் ஜெ.இராமலிங்கம் , மாவட்ட மதிமுக பொருளாலர் கோ.வேலு, மாவட்ட மதிமுக துணை செயலாளர் நாகை.ஜெயசங்கர், மாவட்ட மாணவரனி மதிமுக செயலாளர் நா.க.ஆதித்யா ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் அண்ணாகிராம் மதிமுக ஒன்றிய செயலாளர் எஸ்.கே.வெங்கடேசன்வர்களுடைய சார்பில் 100 க்கும் மேற்பட்ட கழக தோழர்களுடன் போராட்டத்தில் பங்கேற்றனர்.

மேலும் அனைத்து கட்சிகளும் தங்கள் தொண்டர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment