Monday, August 17, 2015

தலைவரின் இன்றைய ஆச்சரியபடுத்தும் நிகழ்வு! தொழிலாளிகளை மதிக்கும் மாண்பு!

தலைவர் வைகோ அவர்கள் வருகிற செப்டம்பர் 15 ல் திருப்பூரில் நடைபெற இருக்கிற மாநாட்டு திடலை பார்வையிட்டு கலந்துரையாடி, சென்னை கிளம்ப விமானத்துக்கு நேரமாகிவிட்டதால் மாநாட்டு திடலை விட்டு கிளம்பினார். அப்போது மாநாட்டு பந்தல் அமைக்கும் பணிக்கு வந்துள்ள தொழிளாளர்களை கண்டவுடன் தலைவர் வைகோ திரும்பவும் காரில் இருந்து இறங்கி வந்து அவரே வாங்க போட்டோ எடுக்கலாம் னு அந்த தொழிளாளர்களை கூப்பிட்டு கை கொடுத்து போட்டோ எடுத்து கொண்டார். 

அந்த தொழிலாளர்கள் நினைத்து கூட பார்திருக்கா மாட்டார்கள். வைகோ கார விட்டு இறங்கி வந்து நமக்கு கை கொடுப்பார்னு. உண்மையாக வேலை செய்கிறவர்களை தலைவர் எப்போதும் மதிப்பவர். மேலும் சாமானிய மக்களிடத்தில் அன்பை பொழிபவர் என மேலும் இந்த நிகழ்வு எடுத்துக்காட்டியது.

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment